Tuesday, November 6, 2012

ரத்தத்தில் இருந்து செங்கல் தயாரிப்பு

ரத்தத்தில் இருந்து செங்கல் தயாரிப்பு: சர்ச்சையை கிளப்பியுள்ள நிபுணர்




லண்டனை சேர்ந்த ஜேக் மன்றோ ரத்தத்தில் செங்கல்லை தயாரித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
லண்டனை சேர்ந்த கட்டிடக்கலை நிபுணரான ஜேக் மன்றோ, அனைத்து வகையான செங்கற்களையும் கொண்டு கட்டிடங்களை வடிவமைப்பதில் கைதேர்ந்தவர்.

கட்டுமானத்தில் அடிக்கடி புதுமையை புகுத்தி வரும் இவர் தற்போது சர்ச்சைக்குரிய செங்கல்லை தயாரித்துள்ளார்.

26 வயதான ஜேக் மன்றோ விலங்குகளை வெட்டி இறைச்சி தயாரிக்கும் தொழிற்கூடங்களில் இருந்து ரத்தத்தை ஒட்டுமொத்தமாக வாங்கியுள்ளார்.

இதனை மணலுடன் கலந்து செங்கல் போன்று தயாரித்து, அவற்றை மின் அடுப்பில் 70 டிகிரி வெப்பநிலையில் சுமார் ஒரு மணி நேரம் வேக வைத்து பதப்படுத்துகிறார். ஒவ்வொரு ரத்த செங்கல் தயாரிப்பதற்கும் அவர் 35 லிட்டர் ரத்தத்தை பயன்படுத்துகிறார்.

இதுபற்றி ஜேக் கூறுகையில், இந்த செங்கல் தண்ணீர் புக முடியாத அளவுக்கு மிகவும் கெட்டியாக உள்ளது. இரும்பு கம்பிக்குப் பதில் இதனை பயன்படுத்த முடியும். மேலும் இந்த செங்கற்களைக் கொண்டு எகிப்தில் முன்மாதிரியான ஒரு கட்டுமானத்தை நிர்மாணிக்க திட்டமிட்டிருக்கிறேன்.

இருப்பினும் இந்த செங்கற்களை கொண்டு வீடு கட்டினால் அதில் மக்கள் வசிக்க விரும்புவார்களா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்றார்.










No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!