Wednesday, November 7, 2012

105 முறை தேர்வு எழுதி தோல்வி அடைந்த பெண்

105 முறை தேர்வு எழுதி தோல்வி அடைந்த பெண்





பிரிட்டனை சேர்ந்த பெண் ஒருவர், 105 முறை தேர்வில் தோல்வி அடைந்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
பிரிட்டனில் ஓட்டுநர் பயிற்சிக்கு முன்பாக எழுத்து தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் வெற்றி பெற்றால் தான் ஓட்டுநர் பயிற்சி கற்றுத் தரப்படும்.

இதில் கேட்கப்படும் 50 கேள்விகளில், 43 கேள்விக்கு கண்டிப்பான முறையில் பதிலளித்தாக வேண்டும்.

பிரிட்டன் இல்போர்டு பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், இந்த தேர்வை 105 முறை எழுதி தோல்வி அடைந்துள்ளார்.

இதற்காக 2.5 லட்ச ரூபாய் வரை செலவழித்துள்ளார். ஏன் இந்த சாதாரண தேர்வில் கூட வெற்றி பெற முடியவில்லை என்பது குறித்த நடந்த ஆராய்ச்சியில், சிலர் பதற்றத்தின் காரணமாகவும், கடைசி நேரத்தில் படிப்பதாலும் தான் தோல்வி ஏற்படுகிறது என தெரியவந்துள்ளது.

இதற்கு முன்பு பீட்டர்பாரோ பகுதியை சேர்ந்த நபர், 84 முறை தேர்வில் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!