Monday, September 24, 2012

எப்பொழுதும் கோபத்துடன் இருப்பவர்களா! உங்களுக்கு ஓர் எச்சரிக்கை


எப்பொழுதும் கோபத்துடன் இருப்பவர்களா! உங்களுக்கு ஓர் எச்சரிக்கை




ஒரு சிலர் எப்பொழுது பார்த்தாலும் கடும் கோபத்துடனும், சிடு சிடு முகமும், சிவந்த கண்களுமாய் இருப்பார்கள். இது போன்ற நபர்களுக்கு மாரடைப்பு எளிதில் தாக்கி மரணம் சம்பவிக்கும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
சிறு குழந்தைகளோ, இளைஞர்களோ யாராக இருந்தாலும் இன்றைய இளம் தலைமுறையினருக்கு எதற்கெடுத்தாலும் கோபம் வருகிறது.

அடிக்கடி கோபப்படுவதால் ரத்த அழுத்தம் 160-80 என எகிறுகிறது. கோபப்படும் நேரத்தில் செயல்பாடுகளை நாம் உணர்வதில்லை.

கோபம் வரும் போது அட்ரினலின் ஹோர்மோன் சுரக்கிறது. அதுவே, உடலின் ரத்தக்குழாயை சுருக்கி விடுகிறது.

இதனால் உடலில் ரத்தம் செல்வது குறைவதால், முகத்தில் அதிக ரத்தம் தேங்கி, முகம் சிவப்பாகிறது.

அதிக கோபம் வரும் போது, அதிகமான அளவு ரத்தத்தை இருதயம் பம்ப் செய்ய வேண்டியிருக்கிறது. கோபப்படுவதால் மனம் மட்டுமின்றி உடலும் கெட்டுப்போய் திடீர் மரணங்கள் சம்பவிக்கின்றன.

அமெரிக்காவில் இருதய நலன்துறை தலைவரும், மியாமி மில்லர் ஸ்கூல் நரம்பியல் துறை தலைவருமான ரால்க் சாக்கோ, மனிதர்களின் கோபத்தினால் நடத்தையில் மாற்றம் ஏற்படுவது மட்டுமல்லாது, இதய நோய்கள் ஏற்படுவது நிச்சயம் என்று கூறியுள்ளார்.

இருதயம் நன்றாக இருந்தால் தான் ஒரு மனிதன் நன்றாக இருக்க முடியும். எனவே கோபத்தை தவிர்த்து மகிழ்ச்சியுடன் வாழ நினைத்தாலே மாரடைப்பு ஏற்படுவதை தவிர்க்கலாம் என்பது மருத்துவர்களின் அறிவுரை.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!