Thursday, September 27, 2012

தாமிரபரணியில் 16கிலோ கட்லா மீன் சிக்கியது

தாமிரபரணியில் 16கிலோ கட்லா மீன் சிக்கியது




தாமிரபரணியில் சுமார் 70 வகை கெண்டைகள், கெழிறு, ஆரல், விரால், அயிரை உட்பட சுமார் 150 வகை மீன்கள் உண்டு. ‘தாமிரபரணி டைகர்‘ எனப்படும் கறுப்பு, வெள்ளை, சிவப்பு வரிக்கோடுகள் கொண்ட அழகிய மீன் இதன் தனிப்பிறப்பு. இங்கு தவிர, காவிரியில் மட்டுமே இது காணப்படுகிறது.

தாமிரபரணியில் மாசும் மணல் கொள்ளையும் அதிகரித்ததால் மீன் இனவிருத்தி இல்லை. அயிரை, உளுவை, சிலேப்பி உள்ளிட்ட 10 வகைகள் அறவே ஒழிந்தன. ஆரலும், விராலும் அங்கொன்றும், இங்கொன்றுமாக தட்டுப்படுகின்றன. கல் ஆரல் மட் டுமே நீந்துகிறது. வெடி வைத்து பிடிக்கும் கொடிய பழக்கத்தால் மீன்கள் விரைந்து அழிந்துவருகின்றன.

தற்போது வளர்ப்பு கெண்டை மீன்களான கட்லா, ராகு, மிர்கால் போன்றவை அதிகம் கிடைப்பதாக மீன் பிடிப்பவர்கள் கூறுகின்றன. நேற்று வண்ணார்பேட்டையை சேர்ந்த மீனவர்கள் வலையில் 16 கிலோ கட்லா சிக்கியது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!