Friday, February 15, 2013

மொரீஷியஸில் சி. இலக்குவனார் தமிழ் பள்ளி திறப்பு

மொரீஷியஸில் சி. இலக்குவனார் தமிழ் பள்ளி திறப்பு



மொரீஷியஸில் கடந்த 3ம் தேதி தமிழ் பள்ளி திறக்கப்பட்டுள்ளது.

மொரீஷியஸ் நாட்டில் கடந்த 3ம் தேதி தமிழ் பள்ளி திறக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கு தமிழுக்காக பாடுபட்ட சி. இலக்குவனாரின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. சி. இலக்குவனார் தமிழ் பள்ளி மாரியம்மன் கோவில் தமிழ்ச் சங்கம் சார்பில் துவங்கப்பட்டுள்ளது.

பள்ளி திறப்பு விழாவில் கலந்து கொண்ட மொரீஷியஸ் வாழ் தமிழ் அறிஞரான அருணாசலம் புட்பரத்தினம் உரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில், சி. இலக்குவனாரின் தமிழ் பணி மற்றும் அவருடைய சிறப்புகள் குறித்து விரிவாகக் கூறினார். பின்னர் பேசிய கேசவன் சொர்ணம், பள்ளிக்கு ஏன் இலக்குவனார் பெயர் வைக்கப்பட்டது என்பதையும், பெயர் பொருத்தத்தையும் பற்றி விளக்கினார்.

தொடர்ந்து பேசிய செமன், தமிழ் பள்ளியின் தேவை குறித்து விளக்கினார். மொரீஷியஸ் நாட்டு தமிழ் கோவில்கள் கூட்டமைப்பு தலைவர் மேனன் மருதை தமிழ் பள்ளி திறக்கப்பட்டதற்கு பாராட்டு தெரிவித்தார்.







No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!