Thursday, June 13, 2013

வாடிகனில் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுகின்றனர்: போப் பிரான்சிஸ் வருத்தம்

வாடிகனில் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுகின்றனர்: போப் பிரான்சிஸ் வருத்தம்




வாடிகன் நிர்வாகத்தில் ஊழல் மலிந்து விட்டதாகவும், அங்குள்ளவர்களில் சிலர் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவதாகவும் போப் பிரான்சிஸ் வருத்தம் தெரிவித்துள்ளார்.
கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மத குருவான போப் பிரான்சிஸ் லத்தீன் அமெரிக்க நாடுகளை சேர்ந்த உறுப்பினர்களோடு இரண்டு நாட்களுக்கு முன் உரையாற்றினார்.

அப்போது வாடிகன் நிர்வாகத்தைப் பற்றியும், அங்குள்ளவர்களின் செயல்பாடுகளைப் பற்றியும் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து போப் பேசுகையில், வாடிகன் நிர்வாகத்தில் மிகப் பெரும் ஊழல்கள் நடைபெறுகின்றன. இதுகுறித்து நிர்வாகிகள் கவலைப்படுவதில்லை.

மேலும் இங்குள்ள சிலர் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வாடிகன் நிர்வாகத்திற்கு மிகப் பெரும் களங்கம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நிர்வாகிகளின் இந்த செயல்பாடுகள் வருத்தம் அளிப்பதாக உள்ளது. கூடிய விரைவில் இவற்றை சரி செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!