Tuesday, June 11, 2013

சவுதி பாலைவனத்தில் 40 கி.மீ. நடந்து சென்ற பாகிஸ்தான் நாட்டு தொழிலாளி மரணம்!

சவுதி பாலைவனத்தில் 40 கி.மீ. நடந்து சென்ற பாகிஸ்தான் நாட்டு தொழிலாளி மரணம்!



சவுதி அரேபியாவில் பாலைவனத்தில் 40 கி.மீ. நடந்து சென்ற பாகிஸ்தான் நாட்டு தொழிலாளி ஒருவர் மரணமடைந்துள்ளார். சவுதியின் வடமேற்கு பகுதியில் உள்ள பாலைவனத்திலேயே இவர் நடந்து சென்றிருக்கிறார்.

கிராமம் ஒன்றில் இருந்து அமலாஜ் நகரத்தை நோக்கி காரில் பாலைவன வீதியில் இவர் பயணம் செய்து கொண்டிருந்தபோது, இவரது கார் செயலிழந்து போனது. அந்த பாதையில் வேறு யாரும் வராத நிலையில், காரை விட்டு இறங்கி இவர் அடுத்த கிராமத்தை நோக்கி நடக்க தொடங்கியிருக்கிறார்.

அடுத்த கிராமம் 40 கி.மீ. தொலைவில் இருந்தது.

அந்தக் கிராமத்தை அடைந்த அவர், அங்கிருந்த பள்ளிவாசலுக்கு சென்று ஏராளமாக தண்ணீர் குடித்திருக்கிறார். அதையடுத்து மயங்கி விழுந்து, மரணம் அடைந்து விட்டார். கடும் வெப்பம், மற்றும் உடலில் இருந்து நீரிழப்பு காரணமாக மரணமடைந்தார் என்று அமலாஜ் நகர போலீஸ் தெரிவித்துள்ளது.




No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!