Thursday, June 13, 2013

டைனோசர்கள் நீரில் தான் வாழ்ந்துள்ளன – ஆய்வாளர் பிரையன் ஜே. போர்டு!

டைனோசர்கள் நீரில் தான் வாழ்ந்துள்ளன – ஆய்வாளர் பிரையன் ஜே. போர்டு!


பூமியிலையே மிக பெரிய உயிரினம் என்று கருதப்படும் டைனோசர் அழிந்து போய் பல ஆண்டுகள் ஆனாலும் அவை பற்றிய கருத்துக்களும் ஆய்வுகளும் தொடர்ந்த வண்ணமே உள்ளது இந்த நிலையில் டைனோசர்கள் நீரில் தான் வாழ்ந்துள்ளன என்று தெரிவித்துள்ளார் ஆய்வாளர் ஒருவர்,

இங்கிலாந்தைச் சேர்ந்த விஞ்ஞானி பிரையன் ஜே. போர்டு, டைனோசர்கள் பற்றி ஆய்வு மேற்கொண்டு வருகிறார். பேராசிரியரான இவர், பி.பி.சி. வானொலி நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது டைனோசர்கள் குறித்து தனது கருத்தை வெளியிட்டார்.

அவர் கூறுகையில், ‘மிகப் பெரிய உருவம் கொண்ட, நீண்ட வாலை உடைய டைனோசர்கள் பூமியில் சுற்றித் திரிந்து அதன் இரையைத் தேடுவது என்பது அதற்கு சிரமமானது. அது சாத்தியமற்றது. டைனோசரின் வால், நீரில் நீந்துவதற்கும், மிதந்தபடியே செல்வதற்கும் ஏற்ற வகையில் உள்ளது. மேலும் நீந்துவதற்கு அது உறுதுணை புரிந்திருக்கிறது’ என்றார்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!