Thursday, October 4, 2012

ஏலத்தில் விடப்படுகிறது செவ்வாய் கிரக கல்

ஏலத்தில் விடப்படுகிறது செவ்வாய் கிரக கல்




செவ்வாய் கிரகத்திலிருந்து பூமியில் விழுந்த சிறிய கல் ரூ.1.35 கோடிக்கு ஏலத்தில் விடப்பட உள்ளது.
பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் செவ்வாய் கிரகத்தில் சிறிய கோள் மோதியதால் உருவான சிறிய பாறை(விண்கல்) கடந்தாண்டு வட ஆப்பிரிக்காவில் உள்ள மொராக்கன் பாலைவனப் பகுதியில் சிறு சிறு துண்டுகளாக விழுந்துள்ளது.

இவை வித்தியாசமாக இருந்ததால், அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் சேகரித்து வைத்தனர்.

இதையறிந்த அமெரிக்க நிறுவனம் ஒன்று, அவர்களிடம் இருந்து 1.1 எடை கொண்ட விண்கற்களை சேகரித்து, லண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்திடம் விற்றது.

இதில் பத்திரப்படுத்தி வைத்திருந்த சிறு பகுதியை இப்போது ஏலத்தில் விற்க அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்கு விலை ரூ.1.35 கோடி என நிர்ணயித்துள்ளது.

இதுபற்றி பழங்கால பொருள்களை ஏலமிடும் அமெரிக்காவைச் சேர்ந்த ஜிம் வால்கர் கூறுகையில், சகாரா பாலைவனப் பகுதியில் இதுபோன்ற விண்கற்கள் அடிக்கடி விழுகின்றன. இவற்றை சேரிக்கும் அப்பகுதி மக்களுக்கு இவற்றின் மதிப்பு தெரிவதில்லை.

ஏலம் விடப்பட உள்ள செவ்வாய் கிரக சிறிய கல் மிகவும் அழகாக உள்ளது. இது கூடுதல் விலை கிடைக்க உதவும். அக்டோபர் 14ஆம் திகதி நியூயார்க்கில் இந்தக் கல் ஏலத்துக்கு வருகிறது என்றார்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!