Thursday, October 4, 2012

புருனே சுல்தான் மகள் திருமணம் அரண்மனையில் கோலாகலமாக நடந்தேறியது

புருனே சுல்தான் மகள் திருமணம் அரண்மனையில் கோலாகலமாக நடந்தேறியது




உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான புருனே சுல்தானின் 5வது மகள் ஹபிசாவுக்கு கோலாகலமாக திருமணம் நடந்தது.
32 வயதாகும் ஹபிசா, மன்னர் அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தார்.

இவர் பிரதமர் அலுவலக ஊழியரான முகமது ருசானியை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களது திருமணம் 1700 அறைகள் கொண்ட மன்னர் அரண்மனையில் கோலாகலமாக நடந்தது.

திருமண விழாவில் தாய்லாந்து பிரதமர், மலேசிய பிரதமர், கம்போடியா பிரதமர் உட்பட ஏராளமான வெளிநாட்டு தலைவர்கள் கலந்து கொண்டனர்.

புருனே சுல்தானுக்கு 3 மனைவிகள் மூலம் 5 மகன்கள், 7 மகள்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.










2 comments:

  1. அருமையாக உள்ளது படங்களும் ,கட்டுரைகளும் மற்றும் செய்திகளும். வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி அன்பரே

      Delete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!