Thursday, October 4, 2012

செவ்வாயில் நீரோடை: கியூரியாசிட்டி கண்டுபிடிப்பு

செவ்வாயில் நீரோடை: கியூரியாசிட்டி கண்டுபிடிப்பு






செவ்வாய் கிரகத்தில் நீரோடை சரளை கல் படுகை இருப்பதை கியூரியா சிட்டி விண்கலம் கண்டுபிடித்துள்ளது.
அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம், செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியுமா? என்பது குறித்து ஆய்வு நடத்தி வருகிறது.

இந்த ஆய்வுகளை மேற்கொள்வதற்காக கியூரியாசிட்டி என்ற விண்கலம் செவ்வாயில் இறங்கி ஆய்வு மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பது தெரியவந்தது.

இந்நிலையில் தற்போது அங்கு மிகப் பெரிய அளவில் நீரோடை சரளை கல் படுகை இருப்பதை கியூரியா சிட்டி விண்கலம் கண்டுபிடித்துள்ளது.

எனவே இங்கு நீரோடை மற்றும் சிற்றாறுகள் இருப்பது தெரிய வந்துள்ளது.

இதை 'கேத்தாக்' என நாசா விஞ்ஞானிகள் அழைக்கின்றனர். இந்த சரளை கற்களின் பாறைகள் உருண்டை வடிவத்தில் உள்ளன.

காற்றின் மூலம் அடித்து வரப்பட்டால் இது போன்று உருவம் கிடைக்காது. நீரோட்டத்தின் வேகத்தை பொறுத்து வடிவம் மாறியிருக்கலாம் என கருதப்படுகிறது.

மேலும், அந்த பாறைகளின் வடிவத்தின் அடிப்படையில் நீரோடை மற்றும் சிற்றாறுகளில் வினாடிக்கு 3 அடி தண்ணீர் ஓடியிருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!