Monday, October 1, 2012

Full Story: ஹீனாவின் காதல் விவகாரத்தை ஐ.எஸ்.ஐ பரப்பி விட்டது: பிரிட்டன் ஊடகம்

ஹீனாவின் காதல் விவகாரத்தை ஐ.எஸ்.ஐ பரப்பி விட்டது: பிரிட்டன் ஊடகம்





பாகிஸ்தான் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஹீனா ரப்பானி கரின் கள்ளக்காதல் விவகாரத்தை அந்நாட்டின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ பரப்பிவிட்டதாக பிரிட்டன் ஊடகம் கூறியுள்ளது.
பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரியின் மகன் பிலாவல் பூட்டோவும் 24, அமைச்சர் ஹீனா ரப்பானிகரும் ஒருவரையொருவர் காதலிப்பதாக வங்கதேச பத்திரிக்கை வெளியிட்டது.

இந்த விவகாரம் தற்போது பாகிஸ்தான் மட்டுமல்ல, உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான் ஐ.எஸ்.ஐ கொடுத்த தகவலின் அடிப்படையிலேயே வங்கதேச பத்திரிக்கை செய்தி வெளியிட்டதாக பிரிட்டன் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

இந்த விடயம் ஐ.எஸ்.ஐ அமைப்பின் காதுகளுக்கு செல்ல, அவர்கள் மிகவும் கடுப்பில் இருக்கிறார்களாம்.

ஹீனாவைப்பற்றி நாங்கள் தகவல் கொடுத்திருந்தால் எங்களுக்கும் அமைச்சகத்துக்கும் பிரச்சினை வரும்.

எனவே இந்த தகவலை நாங்கள் கொடுக்க வில்லை. பிரிட்டன் ஊடகம் எங்களை சுட்டிக்காட்டுவது நகைப்புக்குரியது என்று தெரிவித்துள்ளது.

ஆனால் பிரிட்டன் ஊடகம் உறுதிபட ஐ.எஸ்.ஐ அமைப்பையே குற்றம்சாட்டி வருகிறது.

இதுக்கு எங்கெங்க கலவரம் வெடிக்க போகிறதோ ?????


Part 1

திருமணமான ஹினாவை காதலிக்கிறாரா பெனாசிர் மகன் பிலாவல்? பாகிஸ்தானில் பரபரப்பு


பாகிஸ்தான் நாட்டின் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி, பெனாசிர் பூட்டோ தம்பதியின் மகனான பிலாவால் பூட்டோ, தற்போது பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவராக உள்ளார்.
24 வயதான இவர், பாகிஸ்தான் வெளியுறவுத் துறை பெண் அமைச்சராக இருக்கும் 34 வயதான ஹீனா ரப்பானி கர்ரை காதலிப்பதாக வங்கதேச நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த செய்தியால் பாகிஸ்தானில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஹீனா பெரிய பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர். பிரோஸ் குல்சார் என்ற பெரும் பணக்கார தொழிலதிபரை மணந்து அன்னயா மற்றும் தினா ஆகிய 2 பெண் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.

இந்நிலையில் தன்னைவிட கிட்டத்தட்ட 11 வயது குறைவான(நவம்பரில் அவருக்கு 35 வயது பிறக்கிறது) பிலாவலை அவர் காதலிக்கிறார் என்று கூறப்படுகிறது. மேலும், இருவரும் பாகி்ஸ்தானை விட்டு வெளியேறி சுவிட்சர்லாந்தில் செட்டிலாகவும் முடிவு செய்துள்ளனராம்.

இது குறித்து அறிந்த சர்தாரி ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகளுக்கு தாயான ஹீனாவை மணக்கக் கூடாது என்று தனது மகனைக் கண்டித்துள்ளாராம். அதற்கு பிலாவல் மணந்தால் ஹீனாவைத் தான் மணப்பேன் என்று கூறியுள்ளாராம்.

இந்த காதல் விவகாரம் நீண்ட காலமாக உள்ளதாம். மேலும் அதிபர் மாளிகையில் பிலாவலும், ஹீனாவும் படுக்கையில் இருந்ததை சர்தாரியே நேரில் பார்த்து விட்டார் என்றும் கூறப்படுகிறது.

இதையடுத்து ஹீனாவின் கவனத்தை திசைதிருப்ப சர்தாரி தனது அதிகாரத்தை பயன்படுத்தி பிரோஸின் தொழிலுக்கு இடையூறு செய்தாராம். ஆனால் பிரோஸை விவாகரத்து செய்ய ஹீனா தயாராகி விட்டதால் இந்த முயற்சி பலனில்லாமல் போனதாம்.

அதேசமயம், தன்னுடைய காதலியை மணக்க பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று பிலாவல் மிரட்டியுள்ளாராம்.

ஹீனா மற்றும் அவருடைய குழந்தைகளுடன் சுவிட்சர்லாந்தில் செட்டிலாகப் போவதாக பிலாவல் தன் தந்தையிடம் கூறியுள்ளார் என்றும் அதிலும் ஹீனா விவகாரத்து பெற்ற பின்பு குழந்தைகளை தனது கணவனுடன் அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளாராம் எனவும் அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது.



Part 2

ஹீனா- பிலாவல் காதல் உண்மையா? விவரம் சேகரிக்கும் கணவர்

பாகிஸ்தான் வெளிவிவகாரத் துறை அமைச்சர் ஹீனா ரப்பானி கருக்கும், அந்நாட்டு ஜனாதிபதி ஸர்தாரியின் மகன் பிலாவல் பூட்டோவுக்கும் இடையே காதல் என்று தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
இந்நிலையில் ஹீனா ரப்பானி யார் யாருக்கு எல்லாம் போன் செய்தார் என்ற விவரத்தை கேட்டு அவரது கணவர் பாகிஸ்தான் மத்திய புலனாய்வுத் துறையை அணுகியுள்ளார் என்று புது தகவல் வெளியாகி உள்ளது.

பாகிஸ்தான் வெளிவிவகாரத் துறை அமைச்சர் ஹீனா ரப்பானி கருக்கும்(34), அந்நாட்டு ஜனாதிபதி ஸர்தாரியின் மகனும், ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவருமான பிலாவல் பூட்டோவுக்கும்(24) இடையே காதல் என்று பாகிஸ்தானில் பல வாரங்களாக கிசுகிசுப்பட்டது. இந்நிலையில் வங்கதேச பத்திரிக்கை ஒன்று இந்த விவகாரம் குறித்து நேற்று முன்தினம் செய்தி வெளியிட்டது.

தன்னைவிட கிட்டத்தட்ட 11 வயது குறைவான(நவம்பரில் அவருக்கு வயது 35) பிலாவலை அவர் காதலிக்கிறார் என்று கூறப்படுகிறது.

மேலும் அவர்கள் இருவரும் பாகிஸ்தானை விட்டு வெளியேறி சுவிட்சர்லாந்தில் செட்டிலாக முடிவு செய்துள்ளனராம். இது குறித்து அறிந்த ஸர்தாரி ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகளுக்கு தாயான ஹீனாவை மணக்கக் கூடாது என்று தனது மகனைக் கண்டித்துள்ளாராம். அதற்கு பிலாவல் மணந்தால் ஹீனாவைத் தான் மணப்பேன் என்று கூறியுள்ளாராம்.

ஹீனாவை பிலாவல் மணந்தால் அவரது அரசியல் வாழ்க்கை அடியாகிவிடுமே என்ற கவலையில் ஸர்தாரி உள்ளார் என்று அந்த பத்திரிக்கை செய்தி வெளியிட்டது.

இந்த செய்தி உண்மையா, பொய்யா என்று பலரும் குழம்பிய நிலையில் புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

அதாவது ஹீனாவின் தொழிலதிபர் கணவரான பிரோஸ் குல்சார் தனது மனைவி யார், யாருக்கு போன் செய்து பேசுகிறார் என்ற தகவலைக் கேட்டு மத்திய புலனாய்வுத் துறையின் உதவியை நாடியுள்ளாராம்.

அதிலும் குறிப்பாக ஹீனா போன் செய்யும் இரண்டு எண்கள் யாருடையது என்று தெரிந்து கொள்ள அவர் விரும்புகிறாராம்.

இதன் மூலம் ஹீனா- பிலாவல் காதல் வதந்தி அல்ல என்று பலரும் பேசஆரம்பித்துள்ளனர். 



Part 3

ஹினா ரப்பானி- பிலாவல் காதலா? மோசமான புரளி என்கிறார் கணவர்

பாகிஸ்தான் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஹினா ரப்பானியும், ஜனாதிபதியின மகன் பிலாவலும் காதலிப்பதாக வந்த செய்தி வெறும் வதந்தி தான் என்கிறார் ஹினாவின் கணவர்.
பாகிஸ்தான் ஜனாதிபதியின் மகன் பிலாவல் பூட்டோவும், வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஹினா ரப்பானியும் காதலிப்பதாகவும், விரைவில் சுவிட்சர்லாந்து சென்று தங்கிவிட முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இத்தகவல் வெறும் வதந்தி தான் என்று கூறியுள்ளார் ஹினாவின் கணவர் பெரோஸ் குல்சார்.

இவர் கூறுகையில், என் மனைவியின் புகழை கெடுப்பதற்காக, இது போன்ற மோசமான புரளி கிளப்பி விடப்பட்டுள்ளது.

ஹினாவுக்கும், பிலாவலுக்கும் உள்ள தொடர்புக்கான எந்த ஆதாரங்களையும் அந்த பத்திரிகை வெளியிடவில்லை.

இதில் எனது குழந்தைகளையும் சம்பந்தப்படுத்தியுள்ளனர். எனவே இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!