Tuesday, October 16, 2012

வீதியில் முதலைகள்.. ஸ்கூல் லீவு! முதலை வேட்டை இன்றும் தொடர்கிறது!!

வீதியில் முதலைகள்.. ஸ்கூல் லீவு! முதலை வேட்டை இன்றும் தொடர்கிறது!!





சிறுவர் பாடசாலை அமைந்துள்ள பகுதியில் வீதியில் நடமாடுவதால், நேற்று (திங்கட்கிழமை) தெற்கு வியட்நாமிலுள்ள ஸ்கூலுக்கு விடுமுறை விடப்பட்டது. நேற்று இரவுக்குள் சுமார் 60 முதலைகள் அகப்பட்டன. இன்னும் எத்தனை முதலைகள் அங்கு சுற்றிக்கொண்டு உள்ளன என்று சரியாக தெரியவில்லை.

முதலைகள் காப்பகம் ஒன்றின் சுவர், மழையில் இடிந்து வீழ்ந்ததை அடுத்தே, இந்த முதலைகள் வெளியேறி வீதிகளுக்கு வந்தன. இது, பொதுமக்கள் அடர்த்தியாக வசிக்கும் பகுதியில் நடந்துள்ளது. “டின்ஹ் பின் டவுனில் உள்ள இந்த முதலைகள் காப்பகத்தில் சுமார் 580 முதலைகள் இருந்திருக்கலாம்” என்று வியட்நாமிய பத்திரிகை தான்ஹ் நின் நியூஸ் தெரிவித்துள்ளது.

முதலைகள் தப்பிச் சென்ற காப்பகத்துக்கு அருகிலுள்ள கிம் டொங் பள்ளியை சுற்றியுள்ள வீதிகளில் அநேக முதலைகள் நடமாடுவதால், அந்தப் பள்ளிக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது. நேற்று இரவுக்குள் 60 முதலைகளே அகப்பட்டுள்ள நிலையில், இன்றும் பள்ளிக்கு லீவு விடப்படலாம் என்று  தான்ஹ் நின் நியூஸ் கூறியுள்ளது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!