Friday, January 17, 2014

அழிந்து விடும் அபாய நிலையில் அரிய வகை சிங்கங்கள்

அழிந்து விடும் அபாய நிலையில் அரிய வகை சிங்கங்கள்



மேற்கு ஆப்ரிக்க சிங்கங்கள் விரைவில் அழிந்துவிடும் அபாய நிலையில் இருப்பதாக சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
பந்த்தேரா என்ற தன்னார்வ அமைப்பு மேற்கு ஆப்ரிக்க பகுதியில் இருக்கும் 17 நாடுகளில் ஆய்வு நடத்தியது.

இதுதொடர்பான அறிக்கை சமீபத்தில் வெளியானது.

இதில், செனகலில் தொடங்கி நைஜீரியா வரையிலான 17 நாடுகளில் சுமார் ஆறு ஆண்டுகள் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் படி மேற்கு ஆப்ரிக்காவுக்கே உரிய தனிப்பட்ட வகையான சிங்கங்கள் தற்போது 400 மட்டுமே எஞ்சியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கங்களின் வாழ்விடங்கள் பெருமளவில் விவசாய நிலங்களாக மாற்றப்பட்டதே இதற்கு முக்கியக் காரணம் என்றும், பருத்தி பயிர் செய்வதற்காகவும், உணவுத் தேவைக்கான இதர பயிர்களுக்காவும் பெருமளவில் காடுகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் ஆய்வாளர்களில் ஒருவரான பிலிப் ஹென்ஸ்ஹெல் தெரிவித்துள்ளார்.

மேலும் கூறுகையில், அழிந்து கொண்டிருக்கும் இந்த அரிய வகை சிங்கங்களை பாதுகாக்க தேவைப்படும் நிதி வசதி இங்குள்ள அரசுகளிடம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!