Friday, February 1, 2013

கற்பிட்டி கடற்பரப்பில் பெருமளவான டொல்பின்கள் மரணம்

கற்பிட்டி கடற்பரப்பில் பெருமளவான டொல்பின்கள் மரணம்


கற்பிட்டி கடற்பரப்பில் பெருமளவான டொல்பின்கள் மரணமாகி வருன்றமை தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அப்பிரதேச மீனவர்கள், இந்த கடற்பரப்பில் நேற்று முன்தினம்  மாத்திரம் 42 டொல்பின்கள் பலியாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

தடைசெய்யப்பட்ட உபகரணங்களை பயன்படுத்தி சிலரால் மேற்கொள்ளப்படுகின்ற கடற்றொழில் நடவடிக்கைகளின் போதே டொல்பின்கள் மரணிப்பதாக மீனவர்கள் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக புதிய கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை பிரதியமைச்சர் சரத் குமார குணரத்ன தெரிவிக்கையில், இதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்தார்.



No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!