Wednesday, January 30, 2013

இலங்கையில் பள்ளிக்கூட, பல்கலைக்கழக வயது எல்லைகள் குறைப்பு

இலங்கையில் பள்ளிக்கூட, பல்கலைக்கழக வயது எல்லைகள் குறைப்பு


இலங்கையில் பள்ளிக்கூட மற்றும் பல்கலைக்கழக அனுமதி வயது எல்லைகள் குறைக்கப்படவுள்ளன. இதன்படி, பள்ளிக்கூடங்களுகான அனுமதி வயது 4 ஆகவும், பல்கலைக்கழக அனுமதி வயது 16 ஆகவும் வரையறுக்கப்பட்டுள்ளது.

ஏனைய நாடுகளை பின்பற்றியே இந்த வரையறை மேற்கொள்ளப்படுவதாக உயர்கல்வி அமைச்சர் எஸ். பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

புதிய முறையின்படி 12 ஆம் தரத்தில் உயர்தரப்பரீட்சை எழுதும் மாணவர்கள் தமது 16 வது வயதில் பல்கலைக்கழகத்துக்கு அனுமதி பெறமுடியும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!