Wednesday, January 30, 2013

ஆண்- பெண் பணிபுரியும் இடங்களில் தடுப்பு சுவர்: சவுதியில் புதிய சட்டம்

ஆண்- பெண் பணிபுரியும் இடங்களில் தடுப்பு சுவர்: சவுதியில் புதிய சட்டம்


சவுதி அரேபியாவில் ஆண், பெண் பணிபுரியும் இடங்களில் தடுப்பு சுவர்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
உலகின் எண்ணெய் வளம் மிக்க நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவில் இஸ்லாமிய சட்ட திட்டங்கள் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகின்றன.

ஆணும், பெண்ணும் தனியாக சந்தித்து பேசுவது, பழகுவது போன்ற செயல்கள் அந்நாட்டில் தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுகிறது.

கடந்த 2011ஆம் ஆண்டு பெண்கள் உள்ளாடை விற்பனை மையங்களில் வேலை செய்யும் ஆண்களை வெளியேற்றி விட்டு, பெண்களை பணியமர்த்த வேண்டும் என உத்தரவிட்டது.

இந்நிலையில் தற்போது ஆண்களும், பெண்களும் இணைந்து பணிபுரியும் எல்லா இடங்களிளும் 5 அடிக்கு மேற்பட்ட உயரமான தடுப்பு சுவர்களை ஏற்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

பணியிடங்களில் ஆண்களால் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் குறித்த புகார்கள் அதிகம் வந்ததை கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக சவுதி தொழிலாளர்கள் நல அமைச்சர் அப்டெல் பகி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!