Tuesday, January 29, 2013

எலும்புகள் நொறுங்கிய நிலையில் உயிர் வாழும் அதிசய குழந்தை

எலும்புகள் நொறுங்கிய நிலையில் உயிர் வாழும் அதிசய குழந்தை



உடலில் 30 எலும்புகள் நொறுங்கி பிறந்த குழந்தை அதிர்ஷ்டவசமாக நல்ல நிலையில் உயிர் வாழ்ந்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தின் செஷயர் பகுதியை சேர்ந்தவர் மிலி சிம்சன், இவர் கர்ப்பமாக இருந்த போது ஸ்கேன் செய்த மருத்துவர்கள் வயிற்றில் இருக்கும் குழந்தையில் எலும்புகள் வலுவற்று இருப்பதாகவும், பல எலும்புகள் உடைந்த நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் பல எலும்புகள் உடைந்துள்ளதால் குழந்தை உயிர் பிழைக்க வாய்ப்பில்லை எனவும் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மிலியை கருக்கலைப்பு செய்து கொள்ள அறிவுறுத்தி உள்ளனர்.

ஆனால் அவர் கருக்கலைப்புக்கு மறுத்து, பிரசவம் வரை பொறுத்திருந்து பார்ப்போம் என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மிலிக்கு குழந்தை பிறந்தது. பிறந்த போது, விலா எலும்புகள் உள்பட மொத்தம் 30 எலும்புகள் அவளது உடலில் நொறுங்கிய நிலையில் இருந்தன.

கால்சியம் பற்றாக்குறை காரணமாக ஏற்பட்ட  பிரிட்டில் போன் டிசீஸ் என்று மருத்துவர்கள் கூறினர். உடலுக்கு ஒரு வடிவம் கிடைக்காமல் கூனி குறுகிய நிலையிலேயே இருந்த குழந்தை 8 மாதங்களுக்கு பிறகு தான் உட்காரவே தொடங்கியது.

சமீபத்தில் 2-வது பிறந்தநாளை வெற்றிகரமாக கொண்டாடியும் உள்ளது. தொடர்ச்சியாக கால்சிய மருந்துகள் மற்றும் சிகிச்சை எடுத்து வருகிறாள். ஆனாலும் கூட லேசாக விழுந்தாலே, சற்று அழுத்தமாக தொட்டாலே எலும்புகள் உடைந்து விடுகிறதாம்.

‘இவள் ஒரு ஆச்சரியம்.. அற்புதம்.. சிறப்பாக வளர்த்துக் காட்டுவேன்’ என்று சந்தோஷமாக தெரிவித்து வருகிறாராம் மிலி.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!