Thursday, September 6, 2012

35 ஆண்டுகளுக்கு பின் சூரியக் குடும்பத்தை சென்றடையும் விண்கலம்


35 ஆண்டுகளுக்கு பின் சூரியக் குடும்பத்தை சென்றடையும் விண்கலம்




சூரிய குடும்பத்தில் உள்ள வியாழன், சனி கிரகங்களை ஆய்வு செய்வதற்காக அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் வாயேஜர்-1, வாயேஜர்-2 என்ற விண்கலங்களை அனுப்பியது.

எட்ஸ்டோன்(வயது 76) என்ற விஞ்ஞானியால் உருவாக்கப்பட்ட இந்த விண்கலங்கள் கடந்த 1977ஆம் ஆண்டில் ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.

அதில், வாயேஜர்-2 என்ற விண்கலம் இரண்டு வாரத்துக்கு முன்பு சூரிய குடும்பத்துக்குள் சென்றடைந்தது. தற்போது அது சூரியனில் இருந்து 1440 கோடி கிலோ மீற்றர் தொலைவில் உள்ளது.

இந்நிலையில் வாயேஜர்-1 என்ற விண்கலம் சூரிய குடும்பத்தை சென்றடையும் நிலையில் உள்ளது. அது சூரியனில் இருந்து 1770 கோடி கிலோ மீற்றர் தொலைவில் உள்ளது.

இந்த இரண்டு விண்கலங்களும் வியாழன் மற்றும் சனி கிரகத்தை படம் பிடித்து அனுப்பியுள்ளன. அங்குள்ள எரிமலைகள், கடல் மற்றும் பனி மண்டலங்கள், சனி கிரகத்தின் டைடன் துணை கோள் போன்றவைகள் குறித்து பல தகவல்களை அனுப்பியுள்ளது.

தற்போது சூரிய குடும்பத்துக்குள் பல கோணங்களில் நுழைந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது. மனிதர்கள் தயாரித்து அனுப்பிய விண்கலங்களில் இதுதான் பல 100 கோடி மைல் தூரம் பறந்து சென்று பலவிதங்களில் செயல்படுவதாக விஞ்ஞானிகள் மகிழச்சி தெரிவித்துள்ளனர்.




No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!