Monday, October 21, 2013

ரஷ்யாவில் சாரதியில்லாமல் பயணித்த ரயிலினால் பரபரப்பு

ரஷ்யாவில் சாரதியில்லாமல் பயணித்த ரயிலினால் பரபரப்பு


ரஷ்யாவின் தெற்கு மாஸ்கோ நகரில் இருந்து ரியாசன்ஸ்கி புராஸ்பெக்ட் ரெயில் நிலையம் நோக்கி அதிவேக மெட்ரோ ரெயில் புறப்பட்டது.
அதற்கு எதிர்புறத்தில் வந்த மெட்ரோ ரெயிலின் டிரைவர், எதிரே ஒரு ரெயில் டிரைவரே இல்லாமல் அதிவேகமாக வந்துக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ந்து போனார்.

சற்று தூரத்தை கடந்ததும் ரியாசன்ஸ்கி புராஸ்பெக்ட் மற்றும் குச்மின்கி ரெயில் நிலையங்களுக்கு இடையில் உள்ள குகை பாதையில் எதிரே சென்ற ரெயிலின் டிரைவர் தண்டவாளத்தில் அடிபட்டு இறந்து கிடப்பதை அவர் கவனித்தார்.

இதுதொடர்பாக ரெயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு அவர் தகவல் அளித்ததையடுத்து, டிரைவர் இல்லாமல் சென்ற ரெயில் 'ஆட்டோமேட்டிக் பிரேக் சிஸ்டம்' மூலம் ரியான்ஸ்கி புராஸ்பெக்ட் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.

ஓட்டிக் கொண்டிருக்கும் ரெயிலில் இருந்து கீழே விழும் அளவிற்கு அந்த டிரைவர் கதவை திறந்து வைத்துக்கொண்டு அஜாக்கிரதையாக இருந்தது ஏன்? என்பது தொடர்பாக ரெயில்வே அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!