Wednesday, October 9, 2013

சீனாவில் கடும் உறைபனி: நெடுஞ்சாலைகள் மூடல் - விமானங்கள் ரத்து

சீனாவில் கடும் உறைபனி: நெடுஞ்சாலைகள் மூடல் - விமானங்கள் ரத்து




சீனாவின் பல்வேறு மாகானங்களில் பெய்து வரும் உறைபனியால் பல நெடுஞ்சாலைகள் மூடப்பட்டன.
பனி மூட்டம் அடர்த்தியாக உள்ளதால் தலைநகர் பீஜிங் உள்பட சில விமான நிலையங்களில் இருந்து புறப்படும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.

பீஜிங் நகரை வட கிழக்கு சீனாவுடன் இணைக்கும் ஹர்பின் நெடுஞ்சாலை, ஷங்காய், டியான்ஜின், ஹிபெய் ஆகிய பகுதிகளுடன் இணைக்கும் நெடுஞ்சாலைகளும் மூடப்பட்டுள்ளன.

மேலும், டியான்ஜின் மாகாணத்தில் 14 விரைவு சாலைகளம், ஹிபெய்யில் 13 விரைவு சாலைகளும், லியானிங் மாகானத்தில் 15 விரைவு சாலைகளும் மூடப்பட்டுள்ளன.

சீனாவின் தேசிய தினத்தையொட்டி ஒருவாரம் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நெடுஞ்சாலைகளும் விரைவு சாலைகளும் மூடப்பட்டதால் விடுமுறையை கழிக்க வெளியூர்களுக்கு செல்ல திட்டமிட்டிருந்த லட்சக்கணக்கான மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

பீஜிங் விமான நிலையத்தில் இருந்து புறப்படும் பல விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.





Join with us on Facebook  >>>

              அறிவியல்


No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!