Wednesday, October 9, 2013

2.10.2020 அன்றுடன் உலகில் சாக்லேட்டே கிடைக்காதாம்!

2.10.2020 அன்றுடன் உலகில் சாக்லேட்டே கிடைக்காதாம்! 


2020ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி உலக சாக்லேட் பயன்பாட்டுக்கு இறுதி நாள் என்று கூறப்படுகிறது. 

உலகில் சாக்லேட் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒன்றாக சாக்லேட் உள்ளது. இந்நிலையில் சாக்லேட் பிரியர்களுக்கு தலையில் இடியை இறக்கும் செய்தி ஒன்று கிடைத்துள்ளது.

2.10.2020 

லண்டனில் உள்ள பிரிட்டிஷ் நூலகத்தில் சாக்லேட் துறை நிபுணர்களின் சந்திப்பு கடந்த வாரம் நடந்தது. அதில் வரும் 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2ம் தேதியோடு உலகத்தில் உள்ள எல்லாம் சாக்லேட் தீர்ந்துவிடும் என்று அவர்கள் கணித்துள்ளனர்.

தேவை அதிகரிப்பு 

சாக்லேட் தயாரிக்கத் தேவைப்படும் முக்கிய பொருளான கொக்கோவின் தேவை அதிகரித்துக் கொண்டே போகிறது. அதே சமயம் கொக்கோ விளைச்சல் குறைந்து கொண்டே போகிறது. கொக்கோ விளைச்சலுக்காக பயன்படுத்தப்பட்ட நிலங்கள் தற்போது வேறு விஷயங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றன.

ஐரோப்பா, அமெரிக்கா 

ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் கொக்கோ பயன்பாடு குறைவாகத் தான் இருக்கும் என்றும், ஆசியாவில் தான் தேவை பல மடங்கு அதிகரிக்கும் என்றும் நிபுணர்கள் கணித்துள்ளனர்

கொக்கோ 

கொக்கோ செடியை வளர்த்தால் கொக்கோ பீன்ஸ்கள் கிடைக்க 4 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

விலை அதிகரிக்கும் 

கொக்கோ விளைச்சல் குறைந்து கொண்டே போவதால், அதுவும் தீரப் போவதால் இன்னும் சில ஆண்டுகளில் சாக்லேட் விலை வெகுவாக அதிகரிக்குமாம்.

7 ஆண்டுகளில் 

அதிகரித்து வரும் தேவையால் அடுத்த 7 ஆண்டுகளில் உலகில் கொக்கோ கிடைக்காது என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

Join with us on Facebook  >>>

              அறிவியல்

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!