Monday, August 19, 2013

புகார் கொடுத்தா கண்டுக்கவா மாட்டேங்கிறீங்க: ஃபேஸ்புக் நிறுவனரின் பக்கத்தை ஹேக் செய்த பாலஸ்தீனியர்

புகார் கொடுத்தா கண்டுக்கவா மாட்டேங்கிறீங்க: ஃபேஸ்புக் நிறுவனரின் பக்கத்தை ஹேக் செய்த பாலஸ்தீனியர்


நியூயார்க்: ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க்கின் பக்கத்தை பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹேக்கர் ஹேக் செய்துள்ளார். பாலஸ்தீனத்தைச் சேர்ந்த கம்ப்யூட்டர் நிபுணர் கலீல் ஷ்ரியாதே. அவர் ஃபேஸ்புக்கின் பாதுகாப்பு குழுவை தொடர்பு கொண்டு புகார் கூறினார்.

அதாவது ஃபேஸ்புக்கில் யாருடைய கணக்கின் பக்கத்திலும்(wall) யார் வேண்டுமானாலும் எழுதும் வகையில் உள்ளது. இது பாதுகாப்பானது இல்லை என்று தெரிவித்துள்ளார். ஆனால் அதை ஃபேஸ்புக் குழு கண்டுகொள்ளவில்லை. வழக்கமாக ஃபேஸ்புக் பாதுகாப்பில் ஏதாவது பிரச்சனை(bug) இருப்பதை கண்டுபிடித்து தெரிவித்தால் பரிசு அளிப்பார்கள். ஆனால் அவர்கள் கலீலிடம் இப்படி ஒரு பிரச்சனையே இல்லை என்று தெரிவித்துவிட்டனர்.

இதனால் கடுப்பான கலீல் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க்கின் பக்கதை ஹேக் செய்து அதில் புகாரை தெரிவித்துள்ளார்.

ஜக்கர்பர்கின் பக்கத்தில்(wall) கலீல் கூறியிருப்பதாவது, 

என் பெயர் கலீல் ஷ்ரியாதே. நான் இன்பர்மேஷன் சிஸ்டம்ஸில் பி.ஏ. முடித்துள்ளேன். உங்களின்(www.facebook.com) இணையதளத்தில் ஒரு பக்கை(bug) கண்டுபிடித்துள்ளேன். அது குறித்து உங்களிடம் புகார் தெரிவிக்க விரும்புகிறேன்.

இந்த பக்(bug) மூலம் ஒரு ஃபேஸ்புக் யூசர் மற்றொரு யூசரின் பக்கத்தில்(wall) எழுத முடிகிறது. நான் சாரா. குடின் என்பவரின் பக்கத்தில் எழுதியுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீனத்தில் வாழும் கலீலுக்கு ஜக்கர்பர்க்குடன் ஹார்வர்டில் படித்த சாராவை தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

Like us on Facebook  >>>

              அறிவியல்

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!