Monday, May 6, 2013

பிரிட்டனில் 220 ஆண்டுகள் பழமை வாய்ந்த ரயில் பாதை கண்டுபிடிப்பு

பிரிட்டனில் 220 ஆண்டுகள் பழமை வாய்ந்த ரயில் பாதை கண்டுபிடிப்பு


பிரிட்டன் நாட்டின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், 220 ஆண்டுகள் பழமை வாய்ந்த குகை ரயில்பாதை ஒன்றை சமீபத்தில் கண்டறிந்துள்ளார்கள்.
பிரிட்டனிலுள்ள டெர்பிஷயரில் வசித்து வரும் ஜான் மிட்கிளே(வயது 55) என்பவரது வீட்டின் பின்புறம் ஒரு பாதை கருங்கற்களால் மறைக்கப்பட்டிருந்தது.

அதனைக் கண்டறிவதற்காக, வீட்டின் உரிமையாளரிடம் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அனுமதி பெற்றனர். பின்னர் கடந்த ஜனவரி மாதம் அவரது வீட்டின் பின்புறத்தில் 3 மீற்றர் ஆழத்திற்கு தோண்டினர். அப்பொழுது 18 மீற்றர் நீளமுள்ள பழமையான ரயில் பாதையைக் கண்டுள்ளனர்.

வரலாற்றுப் புகழ் வாய்ந்த பிரிட்ச்சிலி டன்னல் என்று அழைக்கப்பட்ட அந்தப் பாதை, கடந்த 1793ம் ஆண்டு போடப்பட்டது ஆகும்.

இந்த குகை ரயில் பாதை மூலம் பட்டர்லி என்ற நிறுவனம் இரும்புத் தொழிற்சாலைகளுக்கு வேண்டிய சுண்ணாம்புக் கற்களைக் கொண்டு வர பயன்படுத்தியுள்ளார்கள்.

கடந்த 1977ம் ஆண்டு இந்த இடத்தை விலைக்கு வாங்கியவர் பாறைகள் வைத்துக்கட்ட விரும்பியபோது, ரயில்வேத் துறை இதனை மறுத்துள்ளது.

இதனால் அப்போதைய விலைமதிப்பின்படி 400 பவுண்ட் செலுத்தி தன்னுடைய இடத்தில் சென்ற ரயில்பாதையை விலைக்கு வாங்கி பின்னர் அதன் மீது சுவர் எழுப்பியுள்ளார்.

குகையின் ஆரம்பம் இவரது வீட்டின் பின்புறம் வந்ததால் அதுவும் மறைந்து போக நேர்ந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் தருகின்றனர்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!