Wednesday, March 27, 2013

'பள்ளி'யறையாக மாறிய பவளப்பாறைகள்... லட்சத்தீவில் குவிந்த விஞ்ஞானிகள்!

'பள்ளி'யறையாக மாறிய பவளப்பாறைகள்... லட்சத்தீவில் குவிந்த விஞ்ஞானிகள்!



லட்ச்சத்தீவில் உள்ள பவளப்பாறைகளில் இன்று நடக்கும்

செக்ஸ் காட்சியைக் காண அங்கு பெருமளவில் விஞ்ஞானிகள் குவிந்துள்ளனர் செக்ஸ் காட்சி என்றதும் ஷகீலா நடித்த மலையாளப் படத்தின் ரிலீஸோ என்று நினைக்க வேண்டியதில்லை. இது வேறு மாதிரியான காட்சி...

அதாவது லட்சத்தீவில் உள்ள பவளப் பாறைகளில் படிந்துள்ள கடல் வாழ் விலங்குகள் ஹோலி தினமான இன்று கருத்தரிக்கும் வேலையில் இறங்கும் என்று ஏற்கனவே விஞ்ஞானிகள் கூறியிருந்தனர். இது ஒரு அரிய காட்சியாகும், நிகழ்வாகும். இன்று முழுவதும் இது நடைபெறும். இதைக் காணத்தான் விஞ்ஞானிகள் அங்கு குவிந்துள்ளனர்.

நீருக்குக் கீழ் பவளப் பாறைகளில் நடைபெறும் இந்த அதிசய நிகழ்வினைக் காண விஞ்ஞானிகள் பெரும் ஆர்வம் கொண்டுள்ளனர். முட்டைகள், விந்தனுக்கள் வெளியீட்டின் காரணமாக தண்ணீரே இளஞ்சிவப்பு நிறத்தி்ற்கும், பழுப்பு நிறத்திலும், பச்சை நிறத்திலும் மாறிக் காணப்படுகிறதாம்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!