Friday, August 16, 2013

தலைவா படக்குழுவினருடன் விஜய் உண்ணாவிரதம்- அனுமதி கோரி போலீசிடம் இன்று மனு

தலைவா படக்குழுவினருடன் விஜய் உண்ணாவிரதம்- அனுமதி கோரி போலீசிடம் இன்று மனு

தலைவா படத்தை வெளியிட அனுமதி கோரி நடக்கும் உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய் கலந்து கொள்கிறார். எவ்வளவோ முயற்சி செய்தும் தலைவா படம் வெளியாகவில்லை. நாளைக்குள் வெளியாக வேண்டும் என நடிகர் விஜய், இயக்குநர் விஜய், தயாரிப்பாளர் சந்திரப்பிரகாஷ் ஜெயின் ஆகியோர் தினசரி ஒரு பேட்டி, பிரஸ் மீட் வைத்து வருகின்றனர். 

அரசு இதில் தான் செய்ய வேண்டியது எதுவும் இல்லை என தெளிவுபடுத்திவிட்டது. போலீசாரோ இது தங்கள் வேலையல்ல என்றும், சினிமாத் துறையினர் முடிவு செய்ய வேண்டிய விஷயம் என்றும் கூறிவிட்டது. 

வெளியிட வேண்டிய தியேட்டர்காரர்களும், விநியோகஸ்தர்களும் எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்கிறார்கள். விஜய் படங்களால் ஏற்பட்ட நஷ்டங்களுக்குப் பழி வாங்கவே தியேட்டர்காரர்கள் இப்படிச் செய்வதாகவும் பேச்சு நிலவுகிறது. 

இந்த நிலையில், தலைவா படத்தை வெளியிட முதல்வர் அம்மா நடவடிக்கை 
எடுக்க வேண்டும் என விஜய்யும் அவரது குழுவினரும் திரும்பத் திரும்ப கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

இந்த நிலையில் விஜய், தயாரிப்பாளர், இயக்குநர் விஜய், தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் மற்றும் தலைவா படக் குழுவினர் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டு நாளை காலை 11 மணிக்கு சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜிடம் மனு கொடுக்கப் போவதாகக் கூறியுள்ளனர். 

சத்யராஜ், அமலாபால், சந்தானம் ஆகியோரிடம் பேசி இதற்கு சம்மதம் வாங்கியுள்ளாராம் இயக்குநர் விஜய். அனுமதி கிடைத்தால் கண்டிப்பாக உண்ணாவிரதத்தில் கலந்துகொள்வேன் என்று உறுதி அளித்துள்ளாராம் படத்தின் நாயகன் விஜய். எஸ்ஏ சந்திரசேகரன் மற்றும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளும் இதில் கலந்து கொள்ளப் போகிறார்களாம்.

Note : நானும் ஒரு விஜய் ரசிகனே !!! (ஆனால் அவரது தொழிலை வளர்க்க வேண்டியது எனக்கு அவசியமில்லை)

நானும் ஒரு ரசிகனாக இந்த நடிகரிடம் ஒரே ஒரு கேள்வி எத்தனயோ உயிர் எவ்வாறு எல்லாமா பறிபோன பல சந்தர்பங்களில் நீங்கள் உடனே எடுக்காத இந்த முடிவு உங்கள் படம் ஒரு வாரம் தாமதுக்காக உண்ணாவிரதம் என்குரீர்களே ? இது என்ன சாகும் வரையா? (அப்படிஎன்றால் உங்களுக்கும் மு. க. வுக்கும் என்ன வித்தியாசம் என்று புரியவில்லை)

புளைபபுக்காக உண்ணாவிரதம், படம் வெளியாகததால் தூக்கு, ............. நாம எங்க வல்லரசு ஆகுறது

இப்படியான ஒரு இடத்தில் நானும் வாழ்கின்றேன் என்று வெட்ட்கப்படுகின்றேன்


No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!