Wednesday, May 29, 2013

போலீஸார் முன் ஸ்ரீசாந்த்தும், சண்டிலாவும் செம சண்டை..!


போலீஸார் முன் ஸ்ரீசாந்த்தும், சண்டிலாவும் செம சண்டை..!


உன்னால நான் கெட்டேன் என்று ஸ்ரீசாந்த் சண்டை போட, அதற்கு அஜீத் சண்டிலா கடுமையான வார்த்தைகளால் பதிலடி தர போலீஸ் அதிகாரிகள் முன்பு இருவரும் கடுமையாக திட்டிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்பாட் பிக்ஸிங்கில் ஈடுபட்டு, கைதாகியுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்கள் ஸ்ரீசாந்த், அஜீத் சண்டிலா, அங்கீத் சவான் ஆகியோர் தற்போது சிறைவாசத்தைத் தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று கோர்ட்டுக்குக் கொண்டு வரப்படுவதற்கு முன்பு ஸ்ரீசாந்த் மற்றும் சண்டிலா ஆகியோரிடையே கடும் சண்டை மூண்டதாம். இருவரும் கடுமையான வார்த்தைகளால் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக போலீஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.



உன்னாலே உன்னாலே... 

டெல்லி போலீஸ் காவலில் இருந்தபோது நேற்று ஸ்ரீசாந்த்துக்கும், சண்டிலாவுக்கும் இடையே முட்டிக் கொண்டு விட்டதாம். உன்னால்தான் இத்தனை பிரச்சினையும் எனக்கு வந்தது. உன்னால்தான் நான் சீரழிந்து போனேன் என்று சண்டிலாவைப் பார்த்து சொல்லியபடி இருந்தாராம் ஸ்ரீசாந்த்.

ஏய்.. நிப்பாட்டு 

ஸ்ரீசாந்த் பேசியதை பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த சண்டிலாவுக்கு அவர் தொடர்ந்து தன்னை குறை கூறியதால் கோபம் வந்து விட்டது. உடனே ஸ்ரீசாந்த்தை பார்த்து கடுமையான வார்த்தைகளால் திட்டியபடி பதிலடி கொடுக்கஆரம்பித்தார்.

சண்டையோ சண்டை 


இதற்கு ஸ்ரீசாந்த்தும் பதிலுக்குப் பேச அந்த இடமே மீன் கடை போல மாறி விட்டதாம். இருவரும் சரமாரியாக திட்டிக் கொண்டனராம்.

ஆர்டர் ஆர்டர் ஆர்டர் 


இதைப் பார்த் போலீஸ் அதிகாரிகள் ரசாபாசமாகி விடாமல் தடுக்கும் வகையில் இருவரையும் அமைதிப் படுத்தி தள்ளித் தள்ளி உட்கார வைத்தனராம்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!