Tuesday, May 28, 2013

காலநிலை சீர்கேட்டில் சிக்கிய இந்திய நீர்மூழ்கி கப்பலுக்கு எகிப்து ராணுவ உதவி

காலநிலை சீர்கேட்டில் சிக்கிய இந்திய நீர்மூழ்கி கப்பலுக்கு எகிப்து ராணுவ உதவி


இந்திய நீர்மூழ்கி கப்பல் ஐ.என்.எஸ். சிந்துரக்‌ஷாக் 1997-ம் ஆண்டு ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்பட்டது.இந்த நீர்மூழ்கி கப்பலை புதுப்பிப்பதற்காக ரஷ்யாவில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகர துறைமுகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பின்னர் அங்கிருந்து திரும்பிய சிந்துரக்‌ஷாக் நீர்மூழ்கி கப்பல், மத்தியத்தரைக்கடலின் கடல் அலை சீற்றத்தாலும், காலநிலை மிகவும் மோசமாக இருந்ததாலும் தனது பயணத்தை தொடர முடியாமல் மாட்டிக்கொண்டது.

இதனையடுத்து எகிப்து அரசிடம் உதவி கோரப்பட்டது. அதனை ஏற்ற எகிப்திய அரசு, தனது ராணுவ உதவியுடன் இந்திய நீர்மூழ்கி கப்பலை போர்ட் செட் துறைமுகத்திற்கு பத்திரமாக இழுத்து வந்தது.

இந்த நல்ல எண்ண நடவடிக்கையை வரவேற்ற எகிப்திய இந்திய தூதர் நவ்தீப் சூரி, எகிப்து அரசுக்கு நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!