Wednesday, December 19, 2012

இலங்கை யாழ்ப்பாணத்துக்கு போக்குவரத்து துண்டிப்பு! பஸ்கள் பாதி வழியில் மறிப்பு!


இலங்கை யாழ்ப்பாணத்துக்கு போக்குவரத்து துண்டிப்பு! பஸ்கள் பாதி வழியில் மறிப்பு!


இலங்கையில் யாழ்ப்பாணத்துக்கு செல்லும் போக்குவரத்து இன்று அதிகாலை முதல் துண்டிக்கப்பட்டுள்ளது. கடும் வெள்ளப் பெருக்கு காரணமாக, கொழும்புவில் இருந்து சென்ற பஸ்கள் அனைத்தும் சிலாபம் என்ற இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் செல்லும் வீதியில் நேற்றிரவு வெள்ளம் பாய்ந்ததால், கொழும்புவில் இருந்து கிளம்பிச் சென்ற பஸ்களில் இரு பஸ்களால் மட்டுமே, வெள்ளத்தை கடந்து செல்ல முடிந்தது. அதையடுத்து வெள்ளப்பெருக்கு அதிகரித்து விட்டதால், மீதி பஸ்கள் சிலாபம் பகுதியில் நிறுத்தப்பட்டு, வெள்ளம் வடிவதற்காக காத்திருக்கின்றன.

மீண்டும் பாதை போக்குவரத்துக்காக எப்போது திறக்கப்படும் என்ற தகவல், இன்று காலை வரை கிடைக்கவில்லை.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!