Wednesday, May 22, 2013

புதிய சாதனை படைத்தது ரோவர் விண்கலம்!

புதிய சாதனை படைத்தது ரோவர் விண்கலம்! 


செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய நாசாவால் அனுப்பப்பட்டுள்ள, ஆப்பர்சூனிட்டி ரோவர் விண்கலம், புவிக்கு அப்பால் மிக அதிக தூரம் பயணித்து புதிய சாதனையை படைத்துள்ளது.

35.750 கிலோ மீட்டர் பயணித்து 40 ஆண்டுகளாக இருந்து வந்த சாதனையை ஆப்பர்சூனிட்டி ரோவர் விண்கலம் முறியடித்துள்ளது. கடந்த 16-ஆம் தேதி, 80 மீட்டர் தூரத்தை கடந்து ஆப்பர்சூனிட்டி ரோவர் விண்கலம் இந்த சாதனையை நிகழ்த்தியதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

1973-ஆம் ஆண்டு சோவியத் யூனியன் அனுப்பிய, லுனாகோட் 2 ரோவர் விண்கலமே புவிக்கு அப்பால் மிக அதிக தூரம் பயணித்த விண்கலம் என்ற பெயரை பெற்றிருந்தது.

லுனாகோட் 2 ரோவர், 37 கிலோ மீட்டர் தூரம் பயணித்துள்ளது. 2003-ஆம் ஆண்டு நாசா செலுத்திய ஆப்பர்சூனிட்டி ரோவர் விண்கலம் 9 ஆண்டுகளாக செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.


No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!