Monday, May 20, 2013

ஆண்மைக்குறைவை ஏற்படுத்தும் எலுமிச்சை!!!

ஆண்மைக்குறைவை ஏற்படுத்தும் எலுமிச்சை!!!



திடீரென்று குறிப்பிட்ட நாளில் ஆண்மை பலகீனத்திற்குக் காரணம் மனத்தில் உள்ள ஒருவித பயம், தகாத எண்ணம், வாதம் போன்ற நோய்கள் மற்றும் சரியாக சுத்திகரிக்கப்படாத போதை மருந்துகளை அருந்துவது போன்றவைதான்.

எலுமிச்சம்பழச்சாற்றை அதிக அளவில் பயன்படுத்தினால் விந்து நீர்த்து விடும். மேலும் தொடர்ந்து 10 எலுமிச்சை விதைகளை அரைத்து ஒருவன் 40 நாட்களுக்கு உட்கொண்டு வந்தால் அவன் ஆண்மையற்றவனாய்ப் போய்விடுவான் என்று சித்தநூல் கூறுகிறது.

பழங்காலத்தில் தாம்பத்ய உறவின் போது வெளிப்படும் உயிர்ச்சத்தை கெட்டிப்படுத்தி நீண்ட நேரம் இன்பம் காண சில மருந்துகளைச் சாப்பிட்டிருக்கிறார்கள். யாருமே தாம்பத்ய உறவு கொள்ளும் நாள்களில் எலுமிச்சை ரசத்தை தவிர்ப்பது நல்லது.

மற்றபடி எலுமிச்சை சாறை சாதாரணமாக எடுத்துக் கொள்வதால் எந்த பிரச்சனையும் இல்லை.

குறிப்பிட்ட அந்த நாட்களில் தாம்பத்ய உறவு கொள்ளும் முன்னர் சிறிய வெங்காயம் ஒன்றை வாய்க்குள் அடக்கி கொஞ்சம் கொஞ்சமாக சாற்றை உள்ளே இறக்க வேண்டும். உறவு முடியும் வரை வாய்க்குள் வெங்காயம் இருக்கும் படி பார்த்துக் கொண்டால் வெற்றியில் முடியும்.

சாதிக்காய், குல்கந்து, காமஸ்துகி வகைக்கு 20 கிராம். பழைய வெல்லம், இலவங்கம், சாம்பிராணி, கவாப்பு சின்னி வகைக்கு 10 கிராம் எடுத்து வெல்லத்தைத் தவிர மற்றவற்றை நன்றாக இடித்துப் பின்னர் தேன்விட்டுக் குழைத்துத் தினமும் மாலையில் ஒரு நெல்லியளவு சாப்பிட்டுப் பசும்பால் சாப்பிடவும்.

இவ்வண்ணம் 20 நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடலுறவில் தோல்வி என்பது இராது.

மருந்து உண்ணும் பொழுது உடலுறவு கூடாது. மது மாமிசம் சாப்பிடக்கூடாது, உணவில் புளி சேர்த்துக் கொள்ளக் கூடாது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!