Tuesday, April 16, 2013

வந்துகொண்டிருக்கும் காந்தப் புயல்

வந்துகொண்டிருக்கும் காந்தப் புயல்


சூரியனின் மேற்பரப்பில் ஏற்பட்ட பெரும் வெடிப்பு ஒன்றினால் உருவான காந்தப் புயல் ஒன்று இன்று சனிக்கிழமை பூமியை அடையவிருக்கிறது.

இந்தக் காந்தப் புயலினால் செய்மதிகள், தொடர்பு சாதனங்கள் மற்றும் சக்தி பிறப்பாக்கிகள் ஆகியவற்றில் இடையூறு ஏற்படலாம்.

ஆனால், இவற்றில் முக்கியமாக, பூமியின் மேலே உள்ள ஆகாயப் பரப்பில் ஏற்படக்கூடிய ஒளி வண்ணக் காட்சி இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

இவை நொதர்ன் லைட்ஸ் என்று அழைக்கப்படும்.

அதிக சக்தியேற்றம் பெற்ற துணிக்கைகள் புவியை மோதுவதால் ஏற்படுவதே காந்தப் புயல் எனப்படும் இயற்கை நிகழ்வாகும்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!