Tuesday, April 23, 2013

கிணறுகளில் ஒருவகை அமிலம் கண்டுபிடிப்பு !

கிணறுகளில் ஒருவகை அமிலம் கண்டுபிடிப்பு !


சிறுநீரகம் மற்றும் ஈரல் தொடர்பான நோய்களை ஏற்படுத்தக் கூடிய மெலக்ஸின் வகையான அமிலம் அநுராதபுரம் பிரதேச கிணறுகளில் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தேசிய நீர்விநியோக மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் இது தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அநுராதபுர மாவட்டத்தில் சிறுநீரகம் மற்றும் ஈரல் தொடர்பான நோயாளர்கள் அதிக அளவில் கண்டுப்பிடிக்கப்பட்டதனை அடுத்து தேசிய நீர்விநியோக மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் நியமிக்கப்பட்ட குழுவினர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் இது தெரியவந்துள்ளது. அநுராதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒயாமடுவ, தந்திரிமலை ஆகிய பிரதேசங்களில் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அமிலம் எவ்வாறு கிணற்று நீரில் கலக்கிறது என்பது தொடர்பாக இதுவரை எதுவும் அறியப்படவில்லையாம்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!