Friday, March 22, 2013

நியூயார்க்கை நோக்கி வரும் பாரிய ஆபத்து: விஞ்ஞானிகள் எச்சரிக்கை

நியூயார்க்கை நோக்கி வரும் பாரிய ஆபத்து: விஞ்ஞானிகள் எச்சரிக்கை


நியூயார்க் நகரை நோக்கி பாரிய விண்கல் ஒன்று வந்து கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து விஞ்ஞானிகள் மேலும் தெரிவிக்கையில், பூமிக்கு அருகில் சுற்றிக்கொண்டிருக்கும் 95 சதவிகித எரிகற்களை நாசா கண்காணித்து வருகிறது.

அதில் ஒரு கிலோ மீட்டர் விட்டமுடைய எரிகற்களும் அடங்கும். இந்த விண்கல்லானது மனித நாகரிகத்தையே அழித்துவிடும் அபாயம் இருக்கிறது.

இந்நிலையில் நியூயார்க் நகரை நோக்கி வந்துகொண்டிருக்கும் மிகப்பெரிய எரிகல்லை எப்படி சமாளிப்பது என்பது குறித்து ஆலோசிக்க வேண்டும். எரிகல்லை திசைதிருப்ப முயற்சி செய்ய வேண்டும். தேவைப்பட்டால் இதற்காக நீங்கள் கடவுளைப் பிரார்த்திக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் பூமியை தாக்கும் எரிகற்களை திசைதிருப்புவது சம்பந்தமாக தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது குறித்து பன்னாட்டு ஒத்துழைப்பை நாசா எதிர் நோக்கிக் கொண்டிருக்கிறது என்றும் பிரதிநிதிகள் கருத்து தெரிவித்தனர்.

இதேபோன்று கடந்த பிப்ரவரி மாதம் ரஷ்யாவின் செல்யாபின்ஸ்க் என்னுமிடத்தை நோக்கி வந்த எரிகல்லை குண்டு வீசி தகர்த்து விட்டதாக ரஷ்யா அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!