Tuesday, March 19, 2013

உலகையே மாற்றிய 10 அற்புத கண்டுபிடிப்புகள்...

உலகையே மாற்றிய 10 அற்புத கண்டுபிடிப்புகள்...


நாம் என்னதான் அறிவியல் யுகத்தில் இருந்தாலும் இதற்கு புள்ளையார் சுழி எங்கிருந்து வந்தது? நமது மூதாதையர்கள் விட்டுச்சென்ற அவர்களின் அறிவை நாம் தூசி தட்டிப் பயன்படுத்துகிறோம் என்றுசொன்னால் அது மிகையாகாது.

அவர்கள் கண்டுபிடித்தவைகளே இன்று மறுவடிவமெடுத்துள்ளது என்பதையும் மறுக்கமுடியாது. அவர்கள் கண்டுபிடித்த பல உக்திகள் இன்றைய உலகை மாற்றியுள்ளது என்பதே நிதர்சனம். அப்படி உலகையே மாற்றிய 10 அற்புத கண்டுபிடிப்புகள் இங்கே!



உழுதல்:

இன்றளவிலும் சில பகுதிகளில் நடைமுறையில் உள்ள இந்த உழுதல் முறைதான் மிக முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தியது. விவசாயம் செய்வதை எளிமையாக்கியதும் இம்முறையே! ஆனால் இன்று பல்வேறு வளர்ச்சியில் இருக்கும் உழுதலின் நிலையும், உழவனின் நிலையும் வருங்காலத்தில் கேள்விக்குறியுடனே இருக்கும்...

சக்கரம்:
சாதாரணமாக பார்த்தால் இது வெறும் சக்கரம் தான். ஆனால் இது இல்லாமல் எதையாவது நினைத்துப் பார்க்க இயலுமா? வாகனங்கள் சக்கரம் இல்லாமல் இயங்குமா? இந்த சக்கரம் 3100 B.C யில் கண்டுபிடிக்கப்பட்டவை.


இன்டர்நெட்:

சாப்பாடு கூட இல்லாமல் பலரால் சில தினங்கள் உயிர்வாழமுடியும். ஆனால் இன்டர்நெட் இல்லாமால் இருக்க முடியாது என்பார்கள் அவர்கள். அந்த அளவிற்கு மனித வாழ்வில் முக்கியப்பங்குவகிக்கிறது இன்டர்நெட்! இதை கண்டறிந்தவர்களுக்கு ஒரு சல்யூட்!


குளிர்சாதனப் பெட்டி:

ஆண்களின் பார்வையில் இந்த குளிர்சாதனப் பெட்டி என்பது, பணத்தை வீணடிக்கும் ஒரு ஆடம்பர டப்பாதான். ஆனால் பெண்கள் இந்த குளிர்சாதனப் பெட்டியை தயிர், பால், காய்கறிகள், இவ்வளவு ஏன் இட்லி மாவை பாதுகாக்கும் பொக்கிசமாகவே கருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. வெயில் காலங்களில் அதிகம் தேவைப்படும் ஒரு பெட்டி. ஆனால் பயன்படுத்துவதற்கு 'பவர்தான்' இருப்பதே இல்லை!


ஸ்டீம் என்ஜின்:

அந்தக்காலத்தில் ஒரு பகுதியிலிருந்து பிற பகுதிகளுக்கு பொருட்களை எடுத்துச்செல்வது மிகவும் கடினவாகவும், மெதுவாகவும் இருந்தது. அந்த சூழலில்தான் இந்த ஸ்டீம் என்ஜின் அறிமுகப்படுத்தப்பட்டு, சற்றே வேகமானது பிசினஸ்!


அச்சிடும் இயந்திரம்:

ஆயிரம் வருடங்களுக்கும் முன்பே சீனர்கள் காகிதங்களை கண்டறிந்தார்கள் என்று சொல்லப்படுகிறது. காகிதங்களில் அச்சிடுவதற்கு இந்த அச்சிடும் இயந்திரம் பயன்பட்டது. இதனால்தான் தகவல்தொடர்பும் விரிவடைந்தது என்றே சொல்லலாம். செய்திகளை காகிதங்களில் அச்சிட்டது, அது இன்று இணையவழி செய்தியாக மாறியதும் தொழில்நுட்பத்தின் உந்துதலே!


 தகவல்தொடர்பு சாதனங்கள்:

இன்றைய உலகம், மொபைல் போன், டிவி,ரேடியோ போன்றவையெல்லாம் இல்லாமல் வாழவே முடியாது என்கின்ற நிலையில் உள்ளது. டெலிபோனை கண்டுபிடித்தவர் கிரகாம்பெல். டிவியை கண்டுபிடித்தவர் லோகி பைர்ட். ரேடியோவை கண்டுபிடித்தவர் மார்கோனி.


மின்சார விளக்கு:

இந்த பல்ப்பை கண்டுபிடித்தவர் தாமஸ் எடிசன் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அனைத்து எலெக்ட்ரானிக் சாதனங்களும் இதன் அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டது எனவும் சொல்லப்பட்டது. நினைத்துப் பாருங்கள் இந்த பல்ப் மட்டும் இல்லாமல் இருந்தால்...


வாகனங்கள் :

உலகின் முதல் வாகனத்தை உருவாக்கியவர் கார்ல் பென்ஸ் என நம்பப்படுகிறது. இதை இவர் 1885ல் உருவாக்கினார் எனவும் கூறப்படுகிறது. இவைகளில் தான் இன்றைய உலகம் நகர்த்தப்படுகிறது.


கணிப்பொறி:

கம்ப்யூட்டர் பற்றிப் படிக்காதவர்களும் கம்ப்யூட்டர் அறிவு இல்லாவதவ்ர்களும் மிக மிகக் குறைவு எனலாம். அதிக அளவில் வளர்ச்சிபெறும் துறையில் முக்கியமான இடத்தில் கம்ப்யூட்டர் சார்ந்த துறைகளே உள்ளன.














No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!