Wednesday, November 20, 2013

மிகப் பிரகாசமான வால் நட்சத்திரத்தை வெற்றுக் கண்களால் பார்க்கும் அதிஷ்டம் இலங்கை மக்களுக்கு!

மிகப் பிரகாசமான வால் நட்சத்திரத்தை வெற்றுக் கண்களால் பார்க்கும் அதிஷ்டம் இலங்கை மக்களுக்கு!


மிகப் பிரகாசமான வால் நட்சத்திரத்தை இன்று (20) முதல் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை வெற்றுக் கண்களால் பார்க்கும் அவகாசம் இலங்கை மக்களுக்கு கிடைக்க இருப்பதாக தொழில்நுட்பவியல் ஆராய்ச்சி மற்றும் அணுசக்தி அமைச்சு தெரிவித்தது.

நூற்றாண்டின் வால்நட்சத்திரம் என பெயரிடப்பட்டுள்ள இந்த வால்நட்சத்திரம் இந்த வருடத்தில் தென்படவுள்ளது.

இந்த வால்நட்சத்திரம் சூரியனை மெதுமெதுவாக நெருங்கி வருவதாக அறிவித்துள்ள அமைச்சு எதிர்வரும் 28 ஆம் திகதி ஆகும் போது அது சூரியனுக்கு மிக நெருக்கமாக செல்லும் என அறிவித்துள்ளது.

கிழக்கு வானில் அதிகாலை 5.00 மணி அளவில் இதனைக் காண வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்படுகிறது. 2012 ஆம் ஆண்டே இந்த வால்நட்சத்திரம் முதன் முதலில் கண்டு பிடிக்கப்பட்டது.

இதற்கு அய்சோன் என பெயரிடப்பட்டது. வால்நட்சத்திரம் தென்படுகையில் சூரியன் உதயமாகியிருந்தால் வெற்றுக் கண்களினால் அதனை பார்ப்பதை தவிர்க்குமாறும் கோரப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!