Thursday, November 21, 2013

செவ்வாய் கிரகத்தில் கிரானைட் பாறைகள்

செவ்வாய் கிரகத்தில் கிரானைட் பாறைகள்




செவ்வாய் கிரகத்தில் மனிதன் உயிர் வாழ்வதற்கு உரிய சாத்திய கூறுகள் குறித்து உலகின் பல நாடுகளும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன.
இதற்காக இந்நாடுகள் செவ்வாய் கிரகத்துக்கு விண்கலங்களை அனுப்பி ஆராய்ச்சி நடத்தி வருகின்றன.

அமெரிக்காவின் நாசா மையம், செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான தடயங்களை கண்டுபிடித்துள்ளது.

தற்போது இக்கிரகத்தில் கிரானைட் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இத்தகவலை நாசாவை சேர்ந்த பூமி மற்றும் விண்வெளி அறிவியல் தொழில்நுட்ப விஞ்ஞானி ஜேம்ஸ் விரே தெரிவித்துள்ளதுடன், ஆதாரங்களையும் வெளியிட்டுள்ளனர்.

இந்த ஆய்வின் மூலம் செவ்வாய் கிரகத்தின் புவியியல் நிலை குறித்து மேலும் அறிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.


No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!