Tuesday, February 5, 2013

"கார் பார்க்கில் கிடைத்த எலும்புக்கூடு 15ஆம் நூற்றாண்டு இங்கிலாந்து மன்னருடையதுதான்"

"கார் பார்க்கில் கிடைத்த எலும்புக்கூடு 15ஆம் நூற்றாண்டு இங்கிலாந்து மன்னருடையதுதான்"




இங்கிலாந்தின் லெஸ்டர் நகர மையத்தில் கார்கள் நிறுத்துமிடம் ஒன்றில் அண்மையில் தோண்டி எடுக்கப்பட்ட யுத்த தழும்புகள் கொண்ட எலும்புக்கூடு 15ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தை ஆண்ட மன்னர் மூன்றாம் ரிச்சர்டின் சடலம் தான் என்பதை அந்நாட்டின் விஞ்ஞானிகள் உறுதிசெய்துள்ளனர்.

பழம்பெரும் நாடகாசிரியர் ஷேக்ஸ்பியரால் ஒரு கூண் விழுந்த வில்லன் என்று வர்ணிக்கப்பட்டிருக்கும் மன்னர் மூன்றாம் ரிச்சர்ட் 1485ஆம் ஆண்டு நடந்த பொஸ்வொர்த் யுத்தத்தில் கொல்லப்பட்டிருந்தார்.

அதற்கு சுமார் அரை நூற்றாண்டு காலம் கழிந்து துறபற மடங்கள் கலைக்கப்பட்டபோது, இவரது உடல் எச்சங்கள் அது புத்தைக்கப்பட்ட இடத்திலிருந்து காணாமல் போயிருந்தன.

வளைந்த முதுகெலும்பு கொண்ட இந்த எலும்புக்கூட்டை அகழ்வாராய்ச்சியாளர்கள் கடந்த செப்டம்பரில் தோண்டி எடுத்த பின்னர் அதிலே விஞ்ஞானிகள் பலவிதமான அறிவியல் பரிசோதனைகளை நடத்தி அது மன்னர் மூன்றாம் ரிச்சர்ட் என்பதை தற்போது கண்டறிந்துள்ளனர்.
மன்னர் ரிச்சர்ட் தோற்றது இங்கிலாந்தின் சரித்திரத்தில் ஒரு பெரிய திருப்பு முனை ஆகும்.


No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!