Tuesday, February 5, 2013

கனடாவில் சீனத்தொழிலாளருக்கு முன்னுரிமை: உள்நாட்டுத் தொழிலாளர்கள் வழக்கு

கனடாவில் சீனத்தொழிலாளருக்கு முன்னுரிமை: உள்நாட்டுத் தொழிலாளர்கள் வழக்கு


கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத் தொழிற்சாலையில் சீனாவிலிருந்து 201 தொழிலாளரைத் தற்காலிகப் பணியில் அமர்த்த HD சுரங்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
கனடாவிலிருந்து விண்ணப்பித்திருந்த அனுபவம் மிக்க பணியாளர்களைக் கூட குறித்த நிர்வாகம் நிராகரித்ததனால் தொழிற்சங்கங்கள் மத்தியக் கூட்டரசு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளன.

பிரிட்டிஷ் கொலம்பியாவின் வடபகுதியில் முர்ரே ஆற்று நிலக்கரிச் சுரங்கத்தில் வேலை பார்க்க கனடாவைச் சேர்ந்த பலர் விண்ணப்பித்த போதும் அவர்களை முற்றாக நிர்வாகம் நிராகரித்து விட்டது குறித்து கனடாவின் சர்வதேசப் பொறியாளர் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் பிரையான் கோசிரேன் கூறுகையில், விண்ணப்பித்தவர்களில் பலரை நேர்முகத் தேர்வுக்குச் கூட சுரங்க நிர்வாகம் அழைக்கவில்லை.

வழக்குத் தொடுத்த பின்னர் தான் நிராகரித்தவர்களின் 300 விண்ணப்பங்களில், சுரங்கப் பணியில் 30 ஆண்டு கால அனுபவம் பெற்றவர்களும், சுரங்கப்பணி மற்றும் மேற்பார்வைப் பணியில் 20 ஆண்டு அனுபவம் பெற்றவர்களும், ஆறாண்டு கால அனுபவம் உள்ளவர்கள் பலரும் விண்ணப்பத்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

இச்சுரங்கப்பணிக்கான கல்விச் சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பித்த போதும், இந்த அனைவருடைய விண்ணப்பங்களும் நிராகரிப்பட்டு தற்காலிகமாகப் பணி செய்ய சீனாவில் இருந்த ஆட்களை இறக்குமதி செய்கின்றனர் என்று ஊடகத்தினருக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.

அடுத்த வழக்கு விசாரணை ஏப்ரல் மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளநிலையில் கனடாவில் தகுதியான பணியாளர் கிடைக்கவில்லை என்று இந்த HD சுரங்க நிர்வாகம் இதற்கு பதிலளித்துள்ளது.

மேலும், சீனாவிலிருந்து பணியாளரைக் கொண்டு வர இன்னும் முடிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!