Friday, October 12, 2012

சீன எழுத்தாளர் மோவுக்கு இலக்கிய நோபல் பரிசு

சீன எழுத்தாளர் மோவுக்கு இலக்கிய நோபல் பரிசு




பெருமைக்குரிய இலக்கிய நோபல் பரிசை, தொடர்ச்சியாக 4 ஆண்டுகளாக ஐரோப்பிய எழுத்தாளர்களே பெற்று வந்த நிலையில், கடந்த ஆண்டில் சுவீடன் கவிதையாசிரியர் தாமஸ் டிரான்ஸ்டோமருக்கு அது கிடைத்தது. இந்த ஆண்டில் இலக்கிய நோபல் பரிசு சீன எழுத்தாளர் மோ யானுக்கு (57) அறிவிக்கப்பட்டுள்ளது.

இவரது இயற்பெயர் குவான் மோயே. ஆனால், புனைப்பெயரில்தான் அவர் எழுதி வருகிறார். இவருக்கு நோபல் பரிசு வழங்கப்படுவது குறித்து தேர்வு குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சீன கலாச்சாரத்தை மையமாக வைத்து யதார்த்தமாக எழுதும் இவரது எழுத்துக்கள், சீன கிராமிய பாரம்பரியம், வரலாறு, சமகாலத்து நிகழ்வுகள் ஆகியவற்றை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!