Friday, October 12, 2012

அடுத்த 3 ஆண்டில் மருத்துவ காப்பீடு பெற்றவர்கள் எண்ணிக்கை 63 கோடியாகும்

அடுத்த 3 ஆண்டில் மருத்துவ காப்பீடு பெற்றவர்கள் எண்ணிக்கை 63 கோடியாகும்





இந்தியாவில் 2015ம் ஆண்டில் மருத்துவ காப்பீடு பெற்றவர்கள் எண்ணிக்கை 63 கோடியாக உயரும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, இந்தியாவில் அரசு பங்களிப்புடனான மருத்துவ காப்பீடு தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வு குறித்து உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்தியாவில் புதிய தலைமுறை மருத்துவ நிதி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் மூலம் ஒருங்கிணைந்த அளவில் உடல்நலனை பாதுகாக்க முடியும். வரும் 2015ம் ஆண்டில் இந்தியாவில் மக்கள் தொகையில் பாதி அளவு, அதாவது 63 கோடி பேர் மருத்துவ காப்பீடு பெற்றிருப்பார்கள். இது மருத்துவ சிகிச்சை அளிக்கும் முறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!