Friday, August 10, 2012

அதிநவீன முக்கோண பயணிகள் விமானங்கள்


அதிநவீன முக்கோண  பயணிகள்  விமானங்கள்


எதிர்காலத்தில் முக்கோண வடிவத்தில் பயணிகள் விமானத்தை நாசா அறிமுகம் செய்ய உள்ளது.

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, போயிங் நிறுவனத்துடன் இணைந்து “எக்ஸ்-48சி” என்ற மொடல் முக்கோண வடிவ விமானத்தை தயாரித்துள்ளது.

இந்த விமானம் எதிர்காலத்தில் விமான போக்குவரத்திற்கு பயன்படுத்தப்பட உள்ளது. இதன் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்ததாகவும், இந்த விமானங்களின் மொடல்களே அடுத்த 20 ஆண்டுகளில் ஆதிக்கம் செலுத்தும் என்றும் நாசா நம்பிக்கை தெரிவித்துள்ளது.



உளவு விமானத்தைப் போன்று உள்ள இந்த விமானத்தில் ஜன்னலோர இருக்கைகளே இருக்காது என்றும், மாறாக அதிக இருக்கைகள் மற்றும் அதிக எரிபொருள் திறன் கொண்டதாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

அத்துடன் அதிக சரக்குகளையும் இதில் ஏற்றிச் செல்லவும் முடியும். முக்கோண வடிவில் இருப்பதால், வேகமாகவும் செல்ல முடியும்.



எனவே இந்த விமானம் அடுத்த 15- 20 ஆண்டுகளில் மிகச்சிறந்த பயணிகள் விமானங்களாக மாறுவதுடன், இராணுவ பயன்பாடுகளுக்காகவும் பயன்படுத்தலாம் என்றும் நாசா கூறியுள்ளது.



No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!