Friday, May 3, 2013

6 அங்குல எலும்புக்கூடு பாரிய தலையுடன் மீட்பு - மனிதனுடையதாம்!

6 அங்குல எலும்புக்கூடு பாரிய தலையுடன் மீட்பு - மனிதனுடையதாம்!


சுமார் 10 வருடங்களுக்கு முன் சிலியின் அதாகாமா பாலைவனத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய தலையுடன் கூடிய 6 அங்குல எலும்புக்கூடு எச்சமானது மனிதனுக்குரியது என்பதை மரபணு பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

2003 ஆம் ஆண்டு இந்த விநோத தோற்றமுடைய சிறிய எழும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அது வேற்றுக்கிரக வாசிகளுக்குரியது அல்லது கருக்கலைப்புக்குள்ளான சிசுவுக்கோ, குரங்கிற்கோ உரியது என கருதப்பட்டது.

அதாகமா ஹூமனொயிட் என பெயர் சூட்டப்பட்ட இந்த இந்த எழும்புக் கூட்டு எச்சம் அத என அழைக்கப்பட்டது. இந்நிலையில், மேற்படி எலும்புக்கூட்டின் என்பு மச்சையிலிருந்து பெறப்பட்ட மாதிரிகளில் மேற்கொள்ளப்பட்ட மரபணுப் பரிசோதனையின் பின், அது 6 அல்லது 8 ஆண்டுகள் உயிர் வாழ்ந்த மனித சிறுவனுக்குரியது என கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் ஆய்வானது அமெரிக்க கலிபோர்னிய மாநிலத்திலுள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்டது.


No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!