Wednesday, September 4, 2013

டாக்சியில் உறவு வைத்துக்கொள்ள விரும்பும் இந்திய பெண்கள்: கணக்கெடுப்பில் தகவல்

டாக்சியில் உறவு வைத்துக்கொள்ள விரும்பும் இந்திய பெண்கள்: கணக்கெடுப்பில் தகவல் 


சராசரி இந்திய ஆண்கள் வாரத்தில் ஒரு முறை கூட உறவு வைத்துக்கொள்வது இல்லை என்று புதிய கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஆண்களுக்கான லைஃப்ஸ்டைல் பத்திரிக்கையில் மென்ஸ் ஹெல்த் குளோபல் செக்ஸ் கணக்கெடுப்பு 2013 முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 30 நாடுகளைச் சேர்ந்த 50,796 பேர் இந்த கணக்கெடுப்பில் கலந்து கொண்டனர்.

வாரத்திற்கு ஒரு முறை கூட 

இந்திய ஆண்கள் ஒவ்வொரு 6 நொடிக்கு ஒரு முறை செக்ஸ் குறித்து நினைக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் சராசரி இந்திய ஆண்கள் வாரத்தில் ஒரு முறை கூட உறவு வைத்துக்கொள்வதில்லை என்று கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.

செக்ஸ் பொம்மைகள் 

இந்திய ஆண்கள் செக்ஸ் பொம்மைகளை பயன்படுத்த வெட்கப்படுகிறார்களாம். பிற நாட்டு ஆண்களுடன் ஒப்பிடுகையில் இந்திய ஆண்களுக்கு குறைந்த எண்ணிக்கையில் செக்ஸ் பார்ட்னர்கள் உள்ளார்களாம்.

பொய்யான உச்சம் 

இந்திய ஆண்களில் 48 சதவதம் பேர் தங்களுடன் உறவு வைத்துக்கொள்ளும் பெண்கள் உச்சம் அடைந்தது போல் நடிப்பதாக நினைக்கிறார்கள். உறவுக்கு முன்பு முத்தம் கொடுப்பதையே ஆண்கள் விரும்புகிறார்கள்.

டச்சுக்காரர்கள் 

உறவு வைத்துக்கொள்வதில் டச்சுக்காரர்களை அடித்துக்கொள்ள முடியாதாம். குரோஷியாவைச் சேர்ந்தவர்கள் குளங்கள், வயல்கள், பூங்காக்கள், கார்கள் என்று எந்த பொது இடமாக இருந்தாலும் உறவு வைத்துக்கொள்வார்களாம்.

டாக்சியில் 

இந்தியாவில் கூட்டுக் குடும்பங்களில் வாழ்வதால் தனிமை என்பது இல்லாமல் போய்விடுகிறது. இதனால் இந்திய பெண்கள் டாக்சியில் உறவு வைத்துக்கொள்ள விரும்புகிறார்களாம்.

கத்ரீனா கைஃப் 

செக்சியான பெண்கள் பட்டியலில் பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் முதலிடத்தில் உள்ளார். 2வது இடத்தில் சன்னி லியோனும், 3வது இடத்தில் ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலியும், 4வது மற்றும் 5வது இடங்களில் சித்ராங்கதா சிங், பிரியங்கா சோப்ரா ஆகியோர் உள்ளனர்.

Join with us on Facebook  >>>

              அறிவியல்

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!