Monday, April 29, 2013

அச்சச்சே.. மூக்கை குடைந்தால் நோய் எதிர்ப்பு சக்தி கூடுமாம்...

அச்சச்சே.. மூக்கை குடைந்தால் நோய் எதிர்ப்பு சக்தி கூடுமாம்...




நோய் எதிர்ப்புச் சக்தி நமது மூக்கில் உள்ள கழிவில் உள்ளது என்றால் நம்ப முடிகிறதா உங்களால்... ஆம் என நிரூபித்திருக்கிறார் சாஸ்க் விஞ்ஞானி.

துணை பேராசிரியராக சாஸ்கட்ச்வன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஸ்காட் நேப்பர் சொல்கிறார், நாம் கெட்டபழக்கம் என ஒதுக்கும் பல விஷயங்களில் நன்மை தருபவனவும் உள்ளன. மூக்கை விரல் விட்டு குடைவதும் அவற்றில் ஒன்று என்கிறார்.

மேலும் இப்பழக்கம் இயற்கையாகவே மனிதர்களுக்கு உருவாகக்கூடிய ஒரு குணம் என்றும், நோயெதிர்ப்புச் சக்தி ஊக்கி என்றும் கூறுகிறார்.



நீங்க எப்படி பாஸ்... 

பெரும்பாலான குழந்தைகள் கட்டாயம் தங்களது மூக்கில் இருந்து வரும் கழிவை நிச்சயம் ருசி பார்த்தவர்களாகவே இருப்பார்கள் என அடித்துச் சொல்கிறார்.

சாப்பிட்டால் ஆரோக்கியம்... 


மூக்கை குடைவதோடு, அதனை சாப்பிடுவதும் உடலுக்கு ரொம்பவே.... நல்லதாம்.

நுரையீரல் காரணி... 


மூக்கில் ஒளுகும் சளி அல்லது சளி போன்ற திரவத்தில் நுரையீரலைக் காக்கும் காரணிகள் காணப்படுகின்றனவாம். அதனை உட்கொள்வதன் மூலம் நோய் எதிர்ப்பாற்றல் வலுப்பெறுகிறதாம்.

இயற்கை நோய்த்தடுப்பு மருந்து... 


இயற்கையான நோய்த்தடுப்பு மருந்தாக மூக்கில் உருவாகும் கழிவுகள் செயல்படுகின்றனவாம். எனவே, அவற்றை சாப்பிடுதல் மிகவும் நல்லது என ஸ்காட் நிரூபித்துள்ளாராம்.

துடைச்சாக் கூட போதுமாம்... 


மூக்கை துடைத்த கர்ச்சீப் அல்லது டிஸ்யூவைக் கொண்டு உடலின் பாகங்களைத் தேய்க்கும் போது அல்லது துடைக்கும் போது கூட உடலில் நல்ல ஆண்டிபாடிஸ் பெருகச் செய்கிற ஆற்றல் அவற்றிற்கு உண்டாம்.

இது வெறும் ஆரம்பம் தான்... 


ஸ்காட்டின் ஆராய்ச்சிகள் தற்போது ஆரம்ப நிலையிலேயே உள்ளனவாம். விரைவில் விரிவான ஆராய்ச்சி முடிவை வெளியிடுவாராம்.

எது நல்லது... எது கெட்டது... 


தற்போது மனிதர்களின் மூக்கில் இருந்து எந்த வகையான மூக்குக் கழிவுகள் மனிதனுக்கு உண்பதன் மூலம் வேறு வகையான நோய்களைத் தோற்றுவிக்கின்றன என்பது குறித்த ஆய்வில் இருக்கிறாராம் ஸ்காட்.



No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!