Friday, November 1, 2013

மாவிரனுக்கும் பாம்பைக் கண்டால் பயம் ஏன் ?

மாவிரனுக்கும் பாம்பைக் கண்டால் பயம் ஏன் ?


விலங்குகளுக்கு மட்டும் அல்ல, மனிதர்களுக்கும் பாம்பை கண்டால் பயம். ஆனால் உன்மையில் நெப்போலியன் போன்ற மாவீரனுக்கும் பாம்பை கண்டால் பயன் தோன்றும் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள். அதாவது பாம்பு ஒன்றை நாம் முதலில் கண்டால், அந்த செக்கன் எமது மூளையில் முதலில் ஏற்படுவது பயம். பின்னர் நாம் அதனை சமாளித்துக்கொள்கிறோம் என்று விளக்கம் கூறுகிறார்கள். சிறுவயதில் இருந்தே பாம்பை காண்டிராத குழந்தை ஒன்று பெரியவராக வளர்ந்தபின்னர் பாம்பைக் கண்டால் அவர் மூளையில் ஏற்படும் மாற்றம் எப்படி இருக்கும் ? என்றும் மற்றும் பாம்பை முதலிலேயே கண்டவர் திடீரென ஒரு பாம்பை கண்டால் அவர் மூளையில் என்ன மாற்றம் ஏற்படும் என்று ஆராய்ந்த விஞ்ஞானிகள் அதிர்ந்து போனார்கள். காரணம் என்னவென்றால் இரண்டு மூளைகளுமே ஒரே மாதிரி ரியாக் பண்ணுவதே இதற்கு காரணம் ஆகும்.

இதற்கு காரணம் என்ன ? மனிதனுடைய மூளையில், சில விடையங்கள் ஏற்கனவே பாதுகாத்து வரப்படுகிறது. அனேகமாக மனிதனின் மூளை அனுபவங்களைக் கொண்டு தான் விடையங்களை சேமித்து வருவதோடு அனுபவங்களைக் கொண்டு தான் கற்றும் வருகிறது. இன் நிலையில் பாம்பு என்னும் பிராணி கடிக்கும். அதனால் மரணம் சம்பவிக்கும் என்று மனித மூளைக்கு தெரியாத இடத்தில், அவ்வகையான மூளை ஏன் பாம்பை கண்டதும் பயம் கொள்கிறது ? இதுவே விஞ்ஞானிகளின் கேள்வியாக உள்ளது. இதனால் ஜெனட்டிக் மெமரி என்று சொல்லப்படும், சில விடையங்களை நமது மூளை பிறவியில் இருந்தே நினைவில் வைத்திருக்கும் தன்மை கொண்டவை என்று கண்டுபிடித்துள்ளார்கள் விஞஞானிகள். இந்த நினைவு திறன், கரு உருவாகும் முன்னரே காணப்படுகிறது(அதாவது மனிதனின் டி.என்.ஏ) வில் காணப்படுகிறதா என்று அவர்கள் தற்போது ஆராய முறபட்டுள்ளார்கள். 

இதற்கு பாம்பும்-கீரியும் நல்லதொரு உதாரணம் ஆகும். என்ன தான் தனது வாழ் நாளில் கீரி பாம்பை பார்க்காமல் வளரலாம். ஆனால் அது தற்செயலாக ஒரு பாம்பை கண்டால் நிச்சயம் அதனுடன் சண்டையிடவே செய்யும். அது ஏன் அப்படி செய்ய வேண்டும் ? ஏன் அவர்கள் எப்போதும் எதிரியாக இருக்கிறார்கள் என்பதனையும் ஏற்கனவே விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகிறார்கள். மனிதனின் மூளை பல மில்லியன் ரகசிகயங்களை உள்ளடக்கியது. அதனை முழுமையாகக் கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் பெரும் பிரயத்தனம் செய்து வருகிறார்கள். அதிலும் தற்சமயம் உள்ள மனிதர்கள் தமது மூளையின் திறனில் 20% சதவீகிதத்தை மட்டுமே பாவித்து வருகிறார்கள் என்றும் கூறப்படுகிறது. 25 அல்லது 30 சதவிகிதத்தை பாவிக்க ஆரம்பித்தால், பல தொழில் நுட்ப்ப வளர்சியை நாம் அடைந்திருப்போம். பிற கிரகங்களுக்கு செல்லும் வழியை கூட கண்டுபிடித்திருப்போம் என்கிறார்கள்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!